வர்ற 5-ம் தேதி மனைவிக்கு வளைகாப்பு.. காரில் சென்ற செய்தியாளர் விபத்தில் சிக்கி பலி.. திருப்பூரில்!
திருப்பூர் அருகே கார் விபத்தில் செய்தியாளர் பலியானார்
Recommended Video
கோவை: வர்ற 5-ம்தேதி மனைவிக்கு வளைகாப்பு.. காரில் சென்று கொண்டிருந்த ரிப்போர்ட்டர் ராஜசேகரும், அவரது தாயாரும் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் திருப்பூர் மாவட்ட ரிப்போர்ட்டர் ராஜசேகர்.. 32 வயதாகிறது.. இவருக்கு திருமணமாகி 7 மாதம்தான் ஆகிறது.. இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.

முதல் குழந்தை என்பதால், அடுத்த வாரம் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை சிறப்பாக செய்ய திட்டமிருந்த ராஜசேகர், அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று சொந்தக்காரர்கள் கல்யாணத்துக்காக தன்னுடைய அம்மா யமுனா ராணி 52, சகோதரி பானுப்பிரியா 31, மற்றும் இவரது 2 வயது குழந்தை இன்ப நித்திலனை காரில் அழைத்து சென்றிருந்தார்.

திருமணத்தை முடித்துவிட்டு கோவை மேட்டுப்பாளையம் நோக்கி திரும்பி கொண்டிருந்தார். அவிநாசி நரியம்பள்ளிப்புதூர் அருகே சென்ற போது, ஊட்டியில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது.. அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது.. பஸ்சுடன் பலமாக வந்து மோதியதில், ராஜசேகரும், யமுனா ராணியும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

சகோதரி பானுப்பிரியா, குழந்தை இன்ப நித்திலன் ஆகியோர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்... அங்கு அவர்களுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. அடுத்த வாரம் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செய்ய ஆசையாக இருந்த நிலையில், செய்தியாளர் தனது தாயாருடன் மரணம் மரணமடைந்தது பத்திரிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications