டாஸ்மாக் கடைகளை இரண்டு நாளைக்கு மூட வேண்டும்.. தமிழக அரசு அதிரடியாக உத்தரவு
கோவை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபார்கள், மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள், தமிழ்நாடு ஓட்டல், சுற்றுலாத் துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் என அனைத்து வகை மதுவிற்பனை கூடங்களும் வருகிற 26-ந் தேதி (குடியரசு தினம்) மற்றும் 1-ந் தேதி வடலூர் வள்ளலார் நினைவு தினம் ஆகிய 2 நாட்கள் மூடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் விதிமுறைப்படி, தேசிய விடுமுறை நாட்களான குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் 'உலர் நாள்' கடைபிடிக்கப்பட வேண்டும். எனவே ஜனவரி 26ம் தேதியான வரும் திங்கள்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபார்கள், மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள், தமிழ்நாடு ஓட்டல், சுற்றுலாத் துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் மூடப்படுகிறது.

அதேபோல் வள்ளலார் தினமான வரும் பிப்ரவரி 1ம் தேதியும் டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் என்பது சந்திரனின் நிலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திதி/நட்சத்திர விழா ஆகும். அன்று முருகன் கோவிலில், விசேஷமாக இருக்கும். பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்பட புகழ் பெற்ற முருகன் கோவில் அனைத்திலும் விஷேகமாக இருக்கும். அதே நாளில தான் கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சித்தியடைந்ததும் வருகிறது. எனவே ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தான் வடலூரில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும்.
தமிழக அரசு இந்த ஆன்மீக முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்திற்காக டாஸ்மாக் விடுமுறையை அறிவிக்கிறது. அதன்படியே தைப்பூச நாளான பிப்ரவரி 1ம் தேதி தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி வருகிற 26-ந் தேதி (குடியரசு தினம்) மற்றும் 1-ந் தேதி வடலூர் வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், சட்ட விரோதமாக பதுக்கி வைப்பவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் 1937-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை கலெக்டர் பவன்குமார் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்து உள்ளார்.ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் தனித்தனியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications