கல்வி நிறுவனங்களில் தொடரும் ஷாக்.. மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.. அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் கைது!
கோவை; கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ துறை தலைமை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரகுநாதன் கடந்த சனிக்கிழமை மாணவிகள் சிலர் பேராசிரியர் பாலியல் ரீதியாக பேசி இரட்டை அர்த்தம் பட சேட் செய்வதாகவும் சீண்டலில் ஈடுபடுவதாகவும் கல்லூரி முதல்வரிடம் புகாரளித்தனர்.
Recommended Video
பின்னர் கடந்த 16-ம் தேதி மாணவிகள் கைப்பட புகார் அளித்தனர். மாணவர் அமைப்பினரும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து பேராசிரியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பேராசிரியர் மீது புகார்
மாணவிகளிடமும் புகார் குறித்து கேட்டறியப்பட்டது. கல்லூரி தரப்பில் உயர்கல்வித்துறை உயர்திகாரிகள் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை மட்டுமின்றி சட்டபூர்வ நடவடிக்கை தேவை என மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கைது செய்தனர்
இந்த நிலையில் கல்லூரியில் மாணவி அளித்த புகாரின் பேரில் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் இன்று மாலை பேராசிரியர் ரகுநாதனை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

கொலை மிரட்டல்
மானபங்கப்படுத்துதல் (354), கடத்தல் (365), கொலை மிரட்டல் (506(2)) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. அவரை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவலர்கள் முடிவு செய்துள்ளனர்

கோவை சம்பவம்
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆசிரியர் பாலியல் தொல்லை காரணமாக கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி ஆசிரியரின் கொடூர செயலால் மனவேதனை அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியை சீரழித்த காமக்கொடூர ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டான். காமக்கொடூர ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்ட்டுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications