சீட்டுக்காக காங்கிரஸ் தலைகுனியும் என எண்ண வேண்டாம்.. ஒரு காலமும் அது நடக்காது.. K.s.அழகிரி மெசேஜ்..!
கோவை: சட்டமன்றத் தேர்தல் சீட்டுக்காக காங்கிரஸ் தலைகுனியும் என யாரும் எண்ண வேண்டாம் என்றும் அது ஒரு காலமும் நடைபெறாது எனவும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கோவை கருமத்தாம்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட கே.எஸ்.அழகிரி இதனைக் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்து வரும் சூழலில் கே.எஸ்.அழகிரி கூறியுள்ள இந்த கருத்து யாரை மனதில் வைத்து என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏர் கலப்பை பேரணி
மத்திய அரசின் விவசாயிகள் சட்டத்தை கண்டித்து கோவை கருமத்தாம்பட்டியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுகவுக்கு சூசகமாக ஹாட் மெசேஜ் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

தேவையான சீட்
சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தலைகுனிந்து நிற்கும் என எண்ண வேண்டாம் என்றும் அது ஒரு காலமும் நடக்காது எனவும் அவர் கூறியிருக்கிறார். மேலும், சீட் பங்கீடு விவகாரத்தில் அதிகமாகவும் கேட்கமாட்டோம், குறைவாகவும் கேட்கமாட்டோம் எனத் தெரிவித்த கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சிக்கு தேவையான சீட்களை மட்டுமே கேட்டுப் பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

நாடகம் நடத்துவார்கள்
இதனிடையே நாடகம் அரங்கேற்றுவதில் அதிமுகவினர் கெட்டிக்காரர்கள் என்றும் அமித்ஷாவிடம் அவர்கள் என்ன நாடகத்தை நடத்தியுள்ளார்கள் என்ற விவரம் தனக்குத் தெரியவில்லை எனவும் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார். அமித்ஷாவின் வருகை அதிமுக தலைமைக்கு பயத்தை கொடுத்துள்ளதாகவும் அதனால் தான் விமான நிலையத்திற்கெ சென்று வரவேற்பு கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.

மாறுபட்ட கருத்து
திமுக கூட்டணியில் சீட் பேரம் பேசமாட்டோம் என கடந்த வாரம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்திருந்த நிலையில், யாருக்கும் தலைகுனியமாட்டோம் என இந்த வாரம் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார். திமுகவை மனதில் வைத்தே கே.எஸ்.அழகிரியிடம் இருந்து இந்த வார்த்தைகள் வெளிப்பட்டிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications