கருணாநிதியாலேயே ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை.. ஸ்டாலினால் நிச்சயமாக முடியாது.. ஒபிஎஸ்
கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியாலேயே அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை என்றும் ஸ்டாலினால் நிச்சயமாக முடியாதும் என்றும் துணை முதல்வர் ஒபிஎஸ் கூறினார்.
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுகவேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை இருகூர் பகுதியில் அமைச்சர் வேலுசாமி, வேட்பாளர் கந்தசாமியுடன் திறந்த வெளிவாகனத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் கூறுகையில், இங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர். இந்த தொகுதிக்காக ஏராளமான நன்மைகளை செய்துள்ளனர். தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகினற்னர்.
கருணாநிதிக்கு 6 அடி இடம் தராத எடப்பாடிக்கு நீங்கள் வாக்களிக்கலாமா.. ஸ்டாலின் கேள்வி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிறப்பான ஆட்சியை மக்களுக்கு வழங்கினார். அதேபோல் அவர் மக்களுக்கு பார்த்து பார்த்து பல தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தினார். அந்த அடிப்படையில் முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுகிறது. பெண்கள் பாதுகாப்பிற்கு தமிழக அரசு தொடர்ந்து பாடுபடுகிறது
அதிமுகவுக்கு எதிராக துரோகம் செய்து தனிக் கட்சி தொடங்கியவர்கள் காணாமல் போய்விட்டனர். அதுபோல் அதிமுகவுக்கு எதிராக துரோகம் செய்த தினகரன் அணியும் காணாமல் போய்விடும். ஜெயலலிதா உயிரை காக்க முடியாத தினகரன் அணி அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறது. கருணாநிதியாலேயே அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை. ஸ்டாலினால் நிச்சயமாக முடியாது" இவ்வாறு கூறினார்.