ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை எடுத்து சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது!
கோவை: ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தவர்களின் உடல்களை கோவை மாவட்டம் சூலூருக்கு கொண்டு செல்லும் அமரர் ஊர்தி மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கியது. இதையடுத்து வேறொரு அமரர் ஊர்தியில் உடல் கொண்டு செல்லப்பட்டது. அது போல் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸ் வாகனமும் விபத்தில் சிக்கி 6 பேர் காயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்திலிருந்து வருண் சிங் என்பவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.

உடல்கள் அடையாளம்
13 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களது உடல்கள் வெலிங்டன் பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின், புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

வெலிங்டன்
இதையடுத்து டெல்லியில் நாளை இறுதிச்சடங்குகள் நடத்தப்படும் நிலையில் வெலிங்கடனில் இருந்து அந்த 13 உடல்களும் சூலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது நீலகிரி மாவட்டம் பர்லியார் மலைப்பகுதியின் திருப்பத்தில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் 6 பேர் காயமடைந்தனர்.

அமரர் ஊர்தி
பின்னர் உடல்களை எடுத்து சென்ற அமரர் ஊர்தி மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் பிடித்ததால் உடல் எடுத்து சென்ற அமரர் ஊர்தி அந்த வாகனத்தில் மோதியது. இதையடுத்து உடனடியாக வேறு ஒரு அமரர் ஊர்தி வரவைக்கப்பட்டு உடல் பாதுகாப்பாக சூலூருக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

மக்கள் அஞ்சலி
இந்த உடல்களை கொண்டு செல்லும் வழிநெடுகிலும் மக்கள் பூக்களை தூவி வருகிறார்கள். வீரவணக்கம் செலுத்தியும் மலர்களை தூவியும், கைகளை கூப்பியும் அஞ்சலி செலுத்துகிறார்கள். ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உதகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications