கோவையில் ஜொமாட்டோ டெலிவரி பாயை எகிறி வந்து எட்டி உதைத்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளர்.. என்ன நடந்தது?
கோவை: கோவையில் ஜொமாட்டோ உணவு டெலிவரி ஊழியரை ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் ஒருவர் தரக்குறைவாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஸ்டீபன் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அத்துடன் படித்துக் கொண்டே பகுதி நேரமாக ஜொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையும் செய்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 1ம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்துள்ளார்.
இதனை வாங்குவதற்காக, ஸ்டீபன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு சென்ற போது, கடை உரிமையாளர் அவரை தரக்குறைவாக பேசி, அடித்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நிலையில், அந்த வீடியோ பரவிய சர்ச்சையாகி உள்ளது.

இது தொடர்பாக ஜெமாட்டோ உணவு டெலிவரி ஊழியர் ஸ்டீபன் கூறுகையில், உள்ளே சென்ற உடன், என்னிடம் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் ஆர்டர் ஐடி கேட்டார். ஆனால் அங்கிருந்த டிராபிக் காரணமாக எனக்கு காது கேட்கவில்லை. இரண்டு மூன்று முறை என்னை கூப்பிட்டார்.நான் திரும்பவில்லை. உடனே என்னை டே என்று மரியாதை இல்லாமல் கூப்பிட்டு,உனக்கு காது செவுடா, ஹெல்மெட்டை கழட்டிவிட்டு வாடா என்று மரியாதை இல்லாமல் கேட்டார்.
அப்போது அவரிடம் சென்ற போது என்னை அடித்தார். அத்துடன் எங்களை மரியாதை இல்லாமல் பேசினார். அடித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்சனை அப்படியே முடிந்து விடும். இல்லாவிட்டால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications