கோவையில் விஜய் ரசிகர்கள் அட்ராசிட்டி! கையோடு வந்த கேரவனின் கதவு! மாற்று வாகனத்தில் மாநாட்டு பயணம்
கோவை: தவெக பூத் கமிட்டி கருத்தரங்கிற்கு கோவை வந்த விஜய் அங்கு பிரச்சார வாகனத்தை ரசிகர்கள் சேதப்படுத்திவிட்டதால் அவர் மாற்று வாகனமான காரில் பயணித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பூத் கமிட்டி கருத்தரங்கு இன்று கோவை குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.

இன்று காலை தனது வீட்டிலிருந்து விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். அவர் பிரசார வாகனத்தில் சென்ற போது ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்தனர். அப்போது ஒரு சிலர் பிரச்தார வாகனத்தின் மேல் ஏற பார்த்தனர்.
அவர்களை பவுன்சர்கள் அப்புறப்படுத்தினர்.
கோவை வந்த விஜய், அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர விடுதிக்கு ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். சுமார் 4 மணி நேர ஓய்வுக்குப் பிறகு, மாலை 3 மணியளவில் கருப்பு நிற ஃபார்ச்சூனர் காரில் விடுதியிலிருந்து புறப்பட்டார்.
விடுதிக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறும் இடத்திற்கு விஜய் 13 கி.மீ. தூரம் காரில் வந்தார்.
அப்போது அவரை தொண்டர்களும் ரசிகர்களும் பின்தொடர்ந்து வந்தனர். வழியில் ஆங்காங்கே செல்பி எடுக்க ரசிகர்கள் காரை வழிமறித்தனர். இந்த மாநாட்டில் சுமார் 70 பூத் கமிட்டி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்படவுள்ளனர். இந்த கருத்தரங்கம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
முன்னதாக விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார். மாலை 4 மணியளவில் மாநாட்டு வளாகத்தை அடைவார் என எதிர்பார்க்கப்பட்டது. மாநாடு இரவு 7 மணி வரை நடைபெற உள்ளதால், அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர வாய்ப்புள்ளதாக கோவை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, விஜய் பயணித்த கேரவன் வாகனத்தின் கதவுகளை ரசிகர்கள் சேதப்படுத்தியதால், அவர் மாநாட்டு இடத்திற்கு மாற்று வாகனத்தில் பயணித்தார்.












Click it and Unblock the Notifications