விண்வெளிக்கு பறக்கும் இந்தியர்கள்.. பணிகள் நிறைவு! இஸ்ரோ சிவன் சொன்ன தகவல்.. வியக்கும் உலக நாடுகள்

இஸ்ரோவின் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோ சிவன் முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: இஸ்ரோ நிறுவனம் இப்போது விண்வெளி சார்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இஸ்ரோ சிவன் பல முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக விண்வெளி துறையில் இந்தியாவும் தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறது. இன்று உலக நாடுகள் கூட தங்கள் சாட்டிலைட்களை இஸ்ரோ மூலமே செலுத்துகிறது.

அந்தளவுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. இத்துடன் நில்லாமல் தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் கூட இஸ்ரோ நிறுவம் ஆய்வு செய்தே வருகிறது.

 இஸ்ரோ சிவன்

இஸ்ரோ சிவன்

இஸ்ரோ அமைப்பிற்கு கடந்த 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்தவர் சிவன். இவர் இஸ்ரோ தலைவராக இருந்த காலத்தில் தான் இஸ்ரோ அமைப்பு பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. குறிப்பாக இவரது தலைமையில் தான் சந்திரயான் 2 திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கோவை அடுத்துள்ள பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பில் இஸ்ரோ சிவனுக்கு விருது வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவன் பல முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.

 விண்வெளி துறை

விண்வெளி துறை

இந்த நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ முன்ளான் தலைவர் சிவன், "பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் முயற்சியால் இந்தியாவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.. பிரதமரின் நடவடிக்கைகளால் பல்வேறு துறைகளில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. கல்வி- ஸ்டார்ட்அப்-தொழில் சூழல் அமைப்பை துடிப்பானதாக மாற்ற மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.. இது தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் தொழில்முனைவோராக மாற வேண்டும்.. மாணவர்கள் விண்வெளி துறையில் கால் பதிக்க வேண்டும்.

ககன்யான்

ககன்யான்

இஸ்ரோ இப்போது பல்வேறு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.. மனிதர்களை ஏழு நாட்கள் விண்வெளிக்கு அனுப்பி.. அவர்கள் அங்கேயே தங்கி சோதனை செய்து.. பின்னர் பூமிக்கு அழைத்து வரும் திட்டம்தான் ககன்யான்.. அதற்கான தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை நாம் சாட்டிலைட்களை மட்டுமே விண்வெளிக்கு அனுப்பி வந்தோம். இப்போது தான் முதல்முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளோம்.

சவால்கள்

சவால்கள்


விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் பல கட்டுப்பாடுகள் தேவை. அதிநவீன தொழில்நுட்பங்கள் தேவை.. மனிதர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பு தனியாக ராக்கெட் தேவை.. அதை உருவாக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. மேலும், அங்கு விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு பூமியில் இருப்பது போன்ற சீதோஷன நிலையையும் நாம் ஏற்படுத்த வேண்டும். இப்படி பல சவால்கள் உள்ளன.

ரோபோ

ரோபோ

குறிப்பாக அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பும் போது, உச்சபட்ச வெப்பத்தை தாங்கும் தொழில்நுட்பம் நமக்கு தேவைப்படுகிறது.. மேலும், அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தரையிறங்க வேண்டும். இதற்காக பலதரப்பட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சோதனை அனைத்தும் முடிந்தவுடன். மனிதர்கள் இல்லாமல், முதலில் ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்வார்கள். அதில் இருந்து கிடைக்கும் டேட்டாக்களை ஆராய்ந்து பாதுகாப்பு உறுதி செய்தவுடன் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவார்கள்" என்றார்.

 சந்திராயன் 2

சந்திராயன் 2

தொடர்ந்து சந்திராயன் 2 குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "சந்திராயனில் இருக்கும் விண்கலம் இன்னுமே நிலவை சுற்றி ஆய்வு செய்து வருகிறது.. நிலவில் இறங்கிய லேண்டர் விண்கலம் செயல்திறன் இழந்துவிட்ட போதிலும், அது நமக்கு பல தகவல்களை அனுப்பியுள்ளது.. அதில் இருந்து கிடைத்த டேட்டாக்களின் அடிப்படையில் இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+