பிரபல மருத்துவமனையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நித்யா.. பிரசவத்தின் போது இப்படியாக ஆகணும்
கோவை: கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே பிரசவத்தின்போது இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் நித்யா திடீரென உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. திருவல்லாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணம் என்று குடும்பத்தினர் புகார் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம் கேரளாவில் பெரிய அளவில் பேசுபொருளாக இருக்கிறது.
பிரவசத்தின் போது தாய் அல்லது சேய் மரணம் என்பது அபூர்வமாகவே நடைபெறும். அதற்கு மருத்துவ ரீதியாக பல்வேறு காரணங்கள் உள்ளன. அதேநேரம் சில சமயங்களில் சிகிச்சைக்கு தாமதம் அல்லது சிகிச்சையின்போது செய்யும் சில தவறுகளும் உயிரிழப்பிற்கு காரணமாகவிடுகிறது. அந்த வகையில் கேரளாவின் ஆழப்புழாவில் உள்ள மருத்துவமனையில் இரட்டை குழந்தை பெற்ற பெண், மருத்துவனையின் தவறால் இறந்ததாக புகார் எழுந்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா பகுதியில் கே.ஜே.மோகனன் என்பவர் வசிக்கிறார். இவரது மகள் நித்யாவுக்கு 28 வயது ஆகிறது. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். நித்யாவுக்கு கடந்த ஜூன் 7ம் தேதி அன்று காலை 6 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. உடனே திருவல்லாவில் உள்ள ஒரு பிரப தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நித்யாவை அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றிருக்கிறார்கள்.
அங்கு காலை 11 மணியளவில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதன்பிறகு அவருக்கு திடீரென அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நித்யாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இரவு 7 மணிக்கு நித்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தவறான சிகிச்சையே நித்யாவின் உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்கள்.
அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதும் நித்யாவின் கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தார்கள் என்றும் அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்தோம் என்றும் கூறிய நித்யாவின் உறவினர்கள், மாலை 3 மணியளவில் அவருக்கு இதய பிரச்சினை ஏற்பட்டதால், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக எங்களிடம் தெரிவித்தனர். அவரை பார்க்க வேண்டும் என்று கூறியும், அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டனர்.
மாலை 6 மணிக்கு நித்யாவின் உடல் நிலை மோசம் அடைந்ததாக கூறினர். அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கேட்டபோது, அதற்கும் மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. அதன்பிறகு திடீரென அவர் உயிரிழந்து விட்டதாக எங்களிடம் கூறினார்கள். தவறான சிகிச்சை அளித்ததால்தான் நித்யா உயிரிழந்து இருக்கிறார் என்று உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள். இதுகுறித்து திருவல்லா போலீசார் மற்றும் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர். பிரசவத்தின்போது இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications