வேலுமணியின் சொந்த வார்டில் உதித்த "சூரியன்".. வெற்றிச்செல்வனுக்கு திமுக தலைமை கொடுத்த சர்பிரைஸ்!
கோவை: கோவை துணை மேயராக வெற்றிச் செல்வன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு துணை மேயர் பதவி கிடைக்க முக்கிய காரணம் என்ன?
தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22 ஆம் தேதி வெளியானது. இதில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சிகளின் மேயர் பதவி திமுகவுக்கும் ஒரே ஒரு மாநகராட்சி காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்றது.

துணை மேயர்
முன்னதாக நேற்றைய தினம் மேயர், துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேற்று முன் தினம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் கோவை மேயர் பதவியும் துணை மேயர் பதவியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோவை மேயராக எளிமையான இ சேவை மையம் நடத்தி வந்தவர் கல்பனா ஆனந்தகுமார் அறிவிக்கப்பட்டார்.

கோவை டூ சென்னை
இவர் கவுன்சிலராக வென்றதும் கோவையிலிருந்து பேருந்தில் சென்னை சென்று முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். அது போல் கோவை திமுகவில் நிறைய கோஷ்டி பூசல்கள் இருந்து வரும் நிலையில் எந்த கோஷ்டியிலும் சேராதவர் கல்பனா. இவரது பெயரை செந்தில் பாலாஜி பரிந்துரைத்தார்.

கோவையில் திமுக கொடி
அதிமுகவின் கோட்டையாக இருந்த கோவையில் திமுக கொடியை நாட்ட வைத்ததை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நம்பிக்கை வைத்து முதல்வர் ஸ்டாலின், கல்பனாவை மேயர் வேட்பாளராக அறிவித்தார். அது போல் துணை மேயராக வெற்றிச் செல்வன் அறிவித்தார். அவருக்கு ஏன் வழங்கப்பட்டது.

எஸ் பி வேலுமணி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் சொந்த வார்டான 92 -வது வட்டத்தில் வெற்றி பெற்றவர். எஸ் பி வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரில் உள்ள அனைத்து வார்டுகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. இதன் மூலம் கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவையை நழுவவிட்டதன் வருத்தம் திமுகவுக்கு இந்த நகர்ப்புற தேர்தலின் மூலம் தீர்ந்து விட்டது என சொல்லும் அளவுக்கு கோவை வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கோவை மேயரும், கோவை துணை மேயரும் நேற்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications