Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராத்திரி நேரத்தில்.. மறுத்த பெண்.. வற்புறுத்திய இளைஞர்.. ஆத்திரத்தில் கத்திகுத்து.. கோவையில் துயரம்!

காதலிக்க வற்புறுத்தி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார் இளைஞர்

Subscribe to Oneindia Tamil

கோவை: ராத்திரி நேரத்தில் பெண்ணை வற்புறுத்தவும்.. கடைசியில் கத்தியால் குத்தி கொலை வரை விவகாரம் சென்றுவிட்டது.. இளைஞரின் ஆத்திரத்தினால் ஒரு இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவையில் பேரூர் செட்டிபாளையம் அடுத்த ஆறுமுக கவுண்டனூர் என்ற பகுதியை சேர்ந்தவர் ரத்தீஷ்.. 22 வயதாகிறது.. அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

 young lady stabbed by lover for refusing to love in coimbatore

இவர் அதே ஊரை சேர்ந்த சக்திவேலின் மகள் ஐஸ்வர்யா என்பவரை காதலித்தார்.. அந்த பெண்ணும் இவரை காதலித்தார்.. 6 மாத காதல் இது.. இவர்கள் இருவரும் வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென ஐஸ்வர்யா ரத்தீஷிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்... இதனால் சில நாட்களாகவே மன வருத்தத்தில் இருந்தார் ரத்தீஷ்.. நேற்றிரவு ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்ற ரத்தீஷ் தன்னிடம் ஏன் பேசவில்லை என்றும், மறுபடியும் தன்னை பழைய மாதிரியே காதலிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் ஐஸ்வர்யா, காதலிக்க இஷ்டம் இல்லை என்று கறாராக சொல்லியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ரத்திஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யாவின் வயிற்றிலும் கையிலும் மாறி மாறி குத்திவிட்டார்.. அவரது அலறல் சத்தத்தை கேட்டு, ஐஸ்வர்யாவின் அப்பா சக்திவேல் ஓடிவந்தார்.

ரத்த வெள்ளத்தில் மகள் விழுந்து கிடப்பதை கண்டு, அவரை காப்பாற்ற முயன்றார்.. ஆனால், அவரையும் கத்தியால் ரத்தீஷ் குத்திவிட்டார்.. இவர்கள் 2 பேரின் அலறல் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ரத்தீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பிறகு தந்தை - மகள் இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.. 2 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜஸ்வர்யா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்..

தப்பி ஓடிய ரத்தீஷை பேரூர் போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்தும் வருகின்றனர்.. காதலிக்க மறுத்ததாலும், தான் காதலித்த பெண் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆத்திரத்திலும், பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+