கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று இரவு நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகம் அருகே இந்த தாக்குதல் நடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஒரு இட்லி கடையில் வழக்கம்போல் பொதுமக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் சில இளைஞர்கள் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த தகராறு சில நிமிடங்களில் கடுமையான மோதலாக மாறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மோதலின் போது விஷ்வேஷ் என்ற இளைஞர் மீது கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவரது வலது கை மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல் நடத்திவிட்டு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், தகவல் கிடைத்தவுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து கோவை ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்த தாக்குதலுக்கு பின்னால் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா? முன்விரோதம் காரணமா? அல்லது மது போதையில் ஏற்பட்ட தகராறா? என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற மக்கள் அதிகம் கூடும் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இப்படியான வன்முறை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications