இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இரா. சம்பந்தன் உட்பட 25 தமிழர்கள் வெற்றி
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட 25 தமிழர்கள் வென்றுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜ்பக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து புதிய அரசை அமைக்கிறார் மகிந்த ராஜபக்சே.
இத்தேர்தலில் 3-வது பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தம் 10 இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த காலங்களைப் போல இல்லாமல் இம்முறை ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் பல்வேறு கட்சிகளாக பிரிந்து நின்று போட்டியிட்டனர்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என மொத்தம் 25 தமிழர்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்:
- இரா. சம்பந்தன்
- விக்னேஸ்வரன்
- சித்தார்த்தன்
- செல்வம் அடைக்கலநாதன்
- டக்ளஸ் தேவானந்தா
- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- மனோ கணேசன்
- சுமந்திரன்
- சிவஞானம் ஶ்ரீதரன்
- அங்கஜன ராமநாதன்
- சார்ள்ஸ் நிர்மலநாதன்
- ஜெயராஜலிங்கம்
- குலசிங்கம் தீபன்
- பிள்ளையான் - சந்திரகாந்தன்
- சாணாக்கிய ராகுல
- கோவிந்தன் கருணாகரன்
- வேலுகுமார்
- வியாழேந்திரன்
- பழனி திகம்பரம்
- வேலுச்சாமி ராதாகிருஷ்ணன்
- உதயகுமார்
- ஜீவன் தொண்டமான்
- மருதபாண்டி ராமேஸ்வரன்
- வடிவேல் சுரேஷ்
- அரவிந்தகுமார்
இலங்கை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Comments
English summary
25 Tamil Candidates won in Sri Lanka parliamentary election.