அப்பாடா! நிம்மதி.. இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை
கொழும்பு: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து கடந்த 25 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை செய்தது. கைதான 9 மீனவர்களையும் இலங்கையின் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடறப்டை வாடிக்கையாக கொண்டுள்ளது. மீனவர்களை கைது செய்வதோடு வலைகளை அறுப்பது, படகுகளை சேதப்படுத்துவது உள்ளிட்ட அட்டுழியங்களிலும் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது. இலங்கை கடற்படையின் அடாவடி நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

எனினும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாக நீடித்துக் கொண்டேதான் உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 400 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை அழைத்து சென்று இலங்கை கடற்படை சிறையில் அடைத்த நிலையில், தமிழக மீனவர்கள் 9 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 9 தமிழக மீனவர்களையும் இலங்கையின் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மீனவர்க்ளை விடுதலை செய்யப்பட்டதால் விரைவில் தமிழகம் திரும்ப இருக்கிறார்கள். இதனால், மீனவர்களின் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications