சிங்கள தாதா அங்கொட லொக்கா கொலையா இல்லையா.. இல்லாட்டி டிராமாவா.. இலங்கை போலீஸுக்கு டவுட்!
கொழும்பு: பெங்களூருவில் சிங்கள தாதா அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்படுவதே பக்கா நாடகமாக இருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
இலங்கையில் பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, சென்னைக்கு தப்பி வந்தார். சென்னை போலீசில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்த லொக்கா, பெங்களூருக்கு ஓடி தலைமறைவானார்.

இந்த நிலையில் இலங்கையில் அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜூலை 3-ந் தேதியே லொக்கா, விஷம் வைத்து கொல்லப்பட்டுவிட்டதாகவும் தமிழகத்தின் கோயம்புத்தூரில் அவர் எரிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரியவந்தது.
இந்த தகவல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அங்கொட லொக்காவின் கொலை குறித்து பெங்களூரு போலீசாரிடம் நாம் கேட்டபோது, அப்படியான ஒரு தகவல் எதுவுமே இல்லை என கூறினர். தமிழக போலீஸ் தரப்பில் லொக்கா கொலை குறித்து தகவல் எதுவும் இல்லை என கூறப்பட்டது.
இதனிடையே இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் உயர் அதிகாரி ஜோலிய சேனா ரத்ன, லொக்கா கொல்லப்பட்டாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் அப்படி கொல்லப்பட்டதாக நாடகமாடி இந்தியாவிலேயே வேறு பெயரில் லொக்கா பதுங்கவோ அல்லது இலங்கைக்கு வேறு பெயரில் திரும்பி தமது ராஜ்யத்தை மீண்டும் நடத்தவோ திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications