சிங்கள தாதா அங்கொட லொக்கா கொலையா இல்லையா.. இல்லாட்டி டிராமாவா.. இலங்கை போலீஸுக்கு டவுட்!
கொழும்பு: பெங்களூருவில் சிங்கள தாதா அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்படுவதே பக்கா நாடகமாக இருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
இலங்கையில் பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, சென்னைக்கு தப்பி வந்தார். சென்னை போலீசில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்த லொக்கா, பெங்களூருக்கு ஓடி தலைமறைவானார்.

இந்த நிலையில் இலங்கையில் அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜூலை 3-ந் தேதியே லொக்கா, விஷம் வைத்து கொல்லப்பட்டுவிட்டதாகவும் தமிழகத்தின் கோயம்புத்தூரில் அவர் எரிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரியவந்தது.
இந்த தகவல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அங்கொட லொக்காவின் கொலை குறித்து பெங்களூரு போலீசாரிடம் நாம் கேட்டபோது, அப்படியான ஒரு தகவல் எதுவுமே இல்லை என கூறினர். தமிழக போலீஸ் தரப்பில் லொக்கா கொலை குறித்து தகவல் எதுவும் இல்லை என கூறப்பட்டது.
இதனிடையே இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் உயர் அதிகாரி ஜோலிய சேனா ரத்ன, லொக்கா கொல்லப்பட்டாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் அப்படி கொல்லப்பட்டதாக நாடகமாடி இந்தியாவிலேயே வேறு பெயரில் லொக்கா பதுங்கவோ அல்லது இலங்கைக்கு வேறு பெயரில் திரும்பி தமது ராஜ்யத்தை மீண்டும் நடத்தவோ திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது என்றார்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ!












Click it and Unblock the Notifications