இலங்கை நாடாளுமன்ற தேர்தல்- இன்று நள்ளிரவுடன் பிரசாரம் ஓய்வு- ஆக.5ல் வாக்கு பதிவு
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. வரும் 5-ந் தேதி இலங்கையில் வாக்குப் பதிவு நடைபெறும்.
225 எம்.பிக்களைக் கொண்ட இலங்கையின் 8-வது நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 20-ந் தேதி இலங்கை பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்தல் நடைபெறவில்லை. இதனையடுத்து ஆகஸ்ட் 5-ந் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி, மைத்ரிபாலவின் சுதந்திர கட்சி ஆகியவை இலங்கை நாடாளுமன்ற தேர்தலின் பிரதான கட்சிகள்.
ஜேவிபி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மலையகத் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன. இந்த தேர்தலில் தென்னிலங்கையில் சிங்களர் வாக்குகளை மகிந்த ராஜபக்சே கட்சி அறுவடை செய்யும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழர் வாக்குகளை அறுவடைசெய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பெரும் பின்னடைவை எதிர்கொள்ளக் கூடும். ஏனெனில் தமிழர் பகுதியில் தமிழ்க் கட்சிகள் பலவாறாக பிரிந்து கிடக்கின்றன. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவு ஓய்கிறது.
இதனையடுத்து ஆகஸ்ட் 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதனால் இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications