Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Flash Back: பிரபாகரன் கடைசி துப்பாக்கி குண்டு வரை நின்றார்-பொன்சேகா;போரிட்டே வீர மரணமடைந்தார் -கேபி

பிரபாகரன் கடைசிவரை போராடினார் என்பது இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகாவின் கருத்து.

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக பிரபாகரன் கடைசி வரை போரிட்டு மரணமடைந்தார் என இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, பிரபாகரனின் நெருங்கிய சகாவான கேபி ஆகியோர் கூறி வந்தனர்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளை ஒருங்கிணைத்து தமிழர்களுக்கான தமிழீழத் தனிநாடு கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டம் நடத்தியவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இலங்கை ராணுவத்துடனான இந்த யுத்தம் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்றது.

Flash Back: Former Srilankan Army Chief Comments on LTTE Chief Prabhakarans death

2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமான இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இந்த யுத்தத்தின் முடிவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை மவுனிக்க செய்வதாக- கைவிடுவதாக அறிவித்தனர். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், தளபதிகள் அனைவரும் யுத்தத்தில் மரணம் அடைந்தனர் என கூறப்பட்டது.

இது தொடர்பான பல்வேறு கருத்துகளை இலங்கை ராணுவத் தரப்பு கூறி வந்தது. பிரபாகரன் உயிரிழந்ததாக தொடர்ந்து கூறிவந்தவர் அப்போதைய இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா. இது தொடர்பாக சரத் பொன்சேகா கூறுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடைசி துப்பாக்கி குண்டு வரை எதிர்கொண்டார். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை எப்போதும் இருக்கிறது. பிரபாகரன் அமைதி வழியை ஏற்று அரசியலுக்கு திரும்பியிருக்கலாம். அவர் அரசியலில் இருந்திருந்தால் இப்போது மிகப் பெரிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்பார். விடுதலைப் புலிகளின் கே.பி, கருணா, பிள்ளையான் போன்றவர்கள் இலங்கை அரசியல்வாதிகளுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். பிரபாகரனும் அப்படி செய்திருந்தால் ஒட்டுமொத்த வடக்கும் கிழகும் அவரது கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்திருக்கும். விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச நாடுகள் நிதி உதவியும் ஆயுத உதவியும் அளித்திருந்தன. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மேற்கு உலக நாடுகள் அந்த போரை எப்படியாவது தற்காலிகமாக நிறுத்தலாம் என முனைப்பு காட்டின. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அப்போது பாகிஸ்தான், சீனா ஆகியவை எங்களுக்கு ஆயுத உதவியும் கொடுத்தன. இந்தியாவின் நிலைப்பாடு அப்போது வேறானதாக இருந்தது என கூறியிருந்தார்.

Flash Back: Former Srilankan Army Chief Comments on LTTE Chief Prabhakarans death

பிரபாகரனின் நெருங்கிய சகாவான கேபி என்ற குமரன் பத்மநாபன், பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் நான் காப்பாற்ற முயன்றேன். ஆனால் நெடியவனும் காஸ்ட்ரோவும் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதற்காக 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்பட்டது. அதனை காஸ்ட்ரோ தருவதாகக் கூறினார். ஆனால் கடைசி வரை தரவே இல்லை. பிரபாகரனைக் காப்பாற்றிய பெயர் எனக்குக் கிடைத்துவிடுமே என்று அவர்களுக்குப் பொறாமை. அதனால்தான் இப்படி ஆனது. இயக்கத்தில் தனிநபர் ஆதிக்கம் மிகுந்ததால்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டது.இறுதிப் போரின் போது கடைசி நிமிடம் வரை நான் சூசையுடன் தொடர்பில் இருந்தேன். அவர்தான் பிரபாகரனும் பொட்டு அம்மானும் தனி குழுவாகச் சென்று ராணுவத்தை ஊடறுத்து வெளியேறிவிட்டதாக கடைசி நிமிடத்தில் தகவல் கொடுத்தார். அதை நம்பித்தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் அறிவித்தேன். ஆனால் மீண்டும் சூசையுடன் தொடர்பு கொண்ட போது, பிரபாகரனின் ஊடறுப்பு முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், அவர் மட்டும் திரும்பி வந்துவி்ட்டதாகவும் கூறினார். உடன் சென்ற பொட்டு திரும்பவே இல்லையாம். அதன் பிறகு சூசையுடன் எனது தொடர்பு அறுந்துவிட்டது. அடுத்த நாள் தொலைக்காட்சியில் பிரபாகரனின் உயிரற்ற உடலைப் பார்த்தேன். பார்த்ததும் அது பிரபாகரன் உடல்தான் என்று எனக்குத் தெரிந்து விட்டது. தனிமையில் அமர்ந்து ஓவென கதறி அழுதேன். ஆனால் நிச்சயமாக என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. அந்த இடத்தில் நான் இல்லை. கடைசி நேரத் தொடர்புகள் அற்றுப் போய்விட்டன. ஆனால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது தலைவர் பிரபாகரனின் உடல்தான்.அவர் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், பொன்சேகா முன் மண்டியிட்ட நிலையில் அவரை சுட்டுக் கொன்றதாகவும் சிலர் கூறி வருவது அப்பட்டமான பொய். குறிப்பாக தமிழ் தலைவர் ஒருவரே இப்படிக் கூறியிருப்பது துரோகமானது. வேதனை தருகிறது என கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+