இலங்கை திரும்பும் கோத்தபாய ராஜபக்சே- காத்திருக்கும் பிரதமர் பதவி- ராஜினாமா செய்யும் பெண் எம்.பி.!
கொழும்பு: இலங்கையில் மீண்டும் அரசியல் களம் பெரும் பரபரப்பாகிவிட்டது. நாட்டை விட்டு தப்பி ஓடி தாய்லாந்தில் தற்போது தஞ்சமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜ்பக்சே, இலங்கை திரும்ப உள்ளதாகவும்; அவர் பிரதமராக நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
Recommended Video
இலங்கையின் பொருளாதர பேரழிவைத் தொடர்ந்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த கிளர்ச்சிதான் ராஜபக்சே குடும்பத்தினரின் அரசியல் அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதுகிறது எனக் கூறப்பட்டது.

மக்கள் போராட்டங்களால் முதலில் பிரதமர் பதவியை பறிகொடுத்தார் மகிந்த ராஜபக்சே. ஆனாலும் மக்களின் ஆவேசம் அடங்காத நிலையில் போராட்டம் தொடர்ந்தது. இலங்கை ஜனாதிபதி மாளிகையையே பொதுமக்கள் கைப்பற்றினர். இதனால் உயிருக்கு அஞ்சி ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சே இலங்கையைவிட்டே தப்பி ஓடிவிட்டார்.
இலங்கையில் இருந்து முதலில் மாலத்தீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் ஓடினார் கோத்தபாய ராஜபக்சே. தற்போது தாய்லாந்தில் ஏறக்குறைய வீட்டுச் சிறையில் அடைபட்டது போல முடங்கிக் கிடக்கிறார் கோத்தபாய ராஜபக்சே. அமெரிக்கா குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கு கோத்தபாய ராஜபக்சே இடைவிடாமல் முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில்தான் தாய்லாந்தில் பதுங்கி இருக்கும் கோத்தபாய ராஜ்பக்சே இலங்கைக்கு ஆக.24-ல் மீண்டும் திரும்ப போகிறார் என செய்திகள் வெளியாகின. இதனை கோத்தபாய ராஜபக்சேவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தன. மேலும் கோத்தபாய ராஜபக்சேவுக்கு 8 அடுக்கு பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோத்தபாய ராஜினாமா செய்ததால் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கே தரப்பு, அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதேநேரத்தில் நியமன எம்.பி.யாக கோத்தபாய ராஜபக்சே மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவருக்காக சீதா அரம்பேபொல என்ற பெண் எம்.பி. தமது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி எம்.பியாக கோத்தபாய ராஜபக்சே மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தால் ரணில் அவருக்கு பிரதமர் பதவியை வழங்குவார் என்கின்றன கொழும்பு தகவல்கள்.
இதனிடையே கோத்தபாய கோஷ்டி தங்களுக்கு அனுதாபத்தை உருவாக்கிக் கொள்ளவே இத்தகைய தகவல்களைப் பரப்புவதாகவும் பசில் ராஜபக்சேதான் இந்த சம்பவங்களின் சூத்திரதாரி என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications