அங்கொடா லொக்கா ...தொழில் கூட்டாளி...இலங்கையில் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!!
கொழும்பு: இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா தமிழகத்தில் இறந்தது தொடர்பான அறிக்கைகளை இந்திய உயர் கமிஷன் அதிகாரிகளிடம் இலங்கை போலீஸ் கேட்டு இருந்த நிலையில் அவரது தொழில் கூட்டாளி இலங்கையில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
மதுரையில் எரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் அங்கொட லொக்காவின் கூட்டாளியான சோல்ட்டா என்ற அசித ஹேமதிலகேவை என்கவுன்டரில் இலங்கை போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது. 2017-ல் அழகு நிலையத்தில் பெண் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ஹேமதிலகே. இந்த நிலையில் முல்லேரியவா பகுதியில் இருக்கும் வெலிவிட்டா இவர் கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மேற்கு மண்டல தேஷபந்து தென்னகூன் டிஐஜி கூறுகையில், '' அங்கொடா லொக்காவின் தொழில் கூட்டாளியாக இலங்கையில் செயல்பட்டு வந்தவர் சோல்டா. இலங்கையில் பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். 2017ல் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணை கொலை செய்தார். அதே அழகு நிலையத்தில் அதே ஆண்டில் தாதா ஒருவரும் கொலை செய்யப்பட்டார்'' என்றார்.

காதலி கைது
மதுரையில் இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா எரிக்கப்பட்டது தொடர்பாக அவருடைய காதலி அம்மானி தான்ஞி, மதுரை வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தியானேஸ்வரன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் மதுரையில் நிதி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது.

ஆவணங்கள்
சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். கோவை டி.எஸ்.பி. பரமசாமி தலைமையில் 10 பேர் கொண்ட குழு மதுரையில் விசாரணை மேற்கொண்டது. சிவகாமி சுந்தரி தங்கியிருந்த வீட்டிலும் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியானது. இவர்கள் திங்கள் கிழமை தங்களது சோதனையை முடித்துக் கொண்டனர்.

விசாரணையில் தாமதம்
கோவையில் இருந்து சென்ற குழுவுக்கு உதவுவதற்கு மதுரையில் இருந்து பணியாற்றிய சி.பி.சி.ஐ.டி. உயரதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மதுரையில் சோதனையில் பங்கேற்ற அத்தனை அதிகாரிகளும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். இதன் காரணமாக தற்போது இந்த விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அங்கொடா லொக்கா
இலங்கையிலும் அங்கொடா லொக்கா குறித்து விசாரணை தீவிரமடைந்து வருகிறது. அங்கும் பல்வேறு கொலை, கொள்ளை, கடத்தல் ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரது கூட்டாளிகளில் ஒருவரான சோல்டா என்கவுண்டரில் கொல்லப்பட்டு இருக்கிறார். மேலும் அவரது கூட்டாளி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications