ஈஸ்டர் தாக்குதல்: சந்தேக நபர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு- இலங்கையில் புதிய சர்ச்சை
Recommended Video
கொழும்பு: ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சந்தேக நபர்களை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியது ஏன்? என்று இலங்கையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் அமெரிக்கா, ரஷ்யா, இந்திய அதிகாரிகள் முகாமிட்டனர். அமெரிக்கா அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை.

ஆனால் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் இருவரை சந்தித்து பேசியது சர்ச்சையாகி உள்ளது. ஏற்கனவே ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
தற்போது இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை நீட்டிப்பது தொடர்பான விவாதம் நேற்றும் நடைபெற்றது.

இதில் பேசிய கூட்டு எதிரணி எம்.பி. விமல் வீரவன்ச இந்த பிரச்சனையை எழுப்பினார். அவர் பேசுகையில், வெலிசறை கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்களை அமெரிக்கா அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்கமாட்டோம் என கூறியிருந்தனர்.
ஆனாலும் இரு அதிகாரிகள் அந்த சந்தேக நபர்களை சந்தித்து பேசியது எப்படி? ஜூலை 21-ந் தேதி காலை 9 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது கொழும்பு அமெரிக்கா தூதரகத்தில் பணியாற்றும் சஞ்சய் பலிப்பானவும் உடன் இருந்துள்ளார். அப்படி என்ன சந்தேக நபர்களுடன் 2 மணிநேரம் அமெரிக்கா அதிகாரிகள் விவாதிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
-
ஈரானை தொட்டிருக்கக் கூடாது.. உலக நாடுகளின் ஃப்யூஸை பிடிங்கிட்டாங்களே! கதிகலங்க வைத்த கச்சா எண்ணெய் -
இன்னையோட முடிஞ்சுது! ஈரான் மீது பெரிய தாக்குதல் நடத்த முடிவு? மோசமான நாளாக இருக்கும்! அமெரிக்கா எச்சரிக்கை -
அமெரிக்காவால் 1970க்கு பிறகு உலகம் சந்திக்கும் கடுமையான நெருக்கடி! எச்சரித்த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்! -
27வது அலை தாக்குதலை தொடங்கிய ஈரான்! மொத்த வளைகுடாவும் பதறுது.. சிக்கலில் அமெரிக்கா! -
பஹ்ரைனில் ஆபத்தில் சிக்கிய அமெரிக்க கடற்படை! ஒரேயடியாக கைவிட்ட டிரம்ப்! ஈரான் கை ஓங்குது! -
"ஈரான் போர் சீக்கிரமே முடிந்துவிடும்.." டிரம்ப் சொன்ன வார்த்தை.. ஆனால் அடுத்த வரியிலேயே ட்விஸ்ட் -
வெனிசுலாவிலிருந்து.. அமெரிக்காவுக்கு வந்த தங்க கட்டிகள்! மொத்த மதிப்பு பல நூறு கோடிகள்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications