Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவில் தஞ்சம்? இந்திய தூதரகம் முக்கிய விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை அரசியல் தலைவர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

இலங்கை நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

இருப்பினும், இலங்கை அரசு எடுத்த முயற்சிக்கு எதுவும் பெரிய பலன் கிடைக்கவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட அங்கு விண்ணை முட்டும் அளவுக்குச் சென்றுவிட்டது.

Recommended Video

    Srilanka-வில் Rajapaksa குடும்பத்துக்கு வந்த ஆபத்து.. தமிழர்களிடம் உயிர்பிச்சை கேட்ட நிலை !
     இலங்கை

    இலங்கை

    இதன் காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக அங்குள்ள மாணவர்கள் தீவிர போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலங்கை நாடாளுமன்றத்தில் நுழைய மாணவர்கள் முயன்றனர். அப்போது அவர்களைக் கலைக்கக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் மாணவர்கள் சிதறி ஓடியதால், அந்த இடமே முழுக்க போர்க்களம் போலக் காட்சி அளித்தது.

     வன்முறை

    வன்முறை


    இந்தச் சூழலில் மக்கள் போராட்டம் அங்கு இப்போது திடீரென வன்முறையாக வெடித்துள்ளது. அரசு உள்ளிட்ட தனியார் சொத்துகளைப் பொதுமக்கள் சேதப்படுத்தி வருகின்றனர், ராஜபக்சவின் பூர்வீக வீடு உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களின் வீடுகளும் கூட தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை அங்கு 8 பேர் பலியாகி உள்ளனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும் சுத்தமாகப் பயன் அளிக்கவில்லை.

     ராஜினாமா

    ராஜினாமா

    இதையடுத்து பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முதலில் மகிந்த ராஜபக்ச மறுத்தாலும், போராட்டம் மிக கடுமையாக மாறிய நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் போராட்டம் கையை மீறிச் சென்றுவிட்ட நிலையில், மகிந்த ராஜபக்ச திருகோணமலை பகுதியில் பதுங்கி உள்ளதாகத் தகவல் வெளியானது.

    தஞ்சம்

    தஞ்சம்

    மேலும், மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டதாகவும் அந்த வெளியாகின. மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூட இணையத்தில் தகவல் வெளியானது. இதனிடையே இது குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதரகம் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இலங்கை தலைவர்கள் யாரும் இலங்கையில் தஞ்சம் அடையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

     விளக்கம்

    விளக்கம்

    இது தொடர்பாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தனLது ட்விட்டரில், "சில அரசியல் பிரமுகர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. இவை அனைத்தும் போலியான மற்றும் தவறான தகவல்கள். இதில் எந்த உண்மையும் இல்லை. இந்தியாவில் இலங்கை தலைவர்கள் தஞ்சம் என்பதைக் கடுமையாக மறுக்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+