இலங்கையில் ‘ட்ரோன்’கள் மூலம் தாக்குதல்கள் நடத்தவும் சதி திட்டம்.. ’ஷாக்’ தகவல்கள்
Recommended Video
கொழும்பு: இலங்கையில் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்ல பறக்கும் குட்டி விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈஸ்டர் தினத்தின் போது நிகழ்த்தப்பட்ட கோர குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கையின் பல இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை மாகாணத்தின் பல இடங்களில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் ராணுவத்தினர் நேற்று முதல் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் தீவிரவாதிகள், ராணுவத்தினர் இடையே மோதலும் நடைபெற்றது.
இதுவரை 15 தீவிரவாதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் ட்ரோன்கள், வெடிகுண்டு ஜாக்கெட்டுகள், வெடிமருந்துகள் தயாரிக்க இரும்பு குண்டுகள் என ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றை ஆய்வு செய்த அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள், ஈராக் மற்றும் சிரியாவில் ட்ரோன்களில் வெடிகுண்டுகளை நிரப்பி அதன் மூலம் பல இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்தி இருக்கின்றனர். இலங்கையிலும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தவே அவர்கள் திட்டமிட்டிருந்தது அம்பலமாகி உள்ளது.
ஒரே நேரத்தில் அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கிவிட்டு அடுத்தடுத்த இடங்களில் குண்டுவெடிப்புகளை இந்த ட்ரோன்கள் மூலம் நிகழ்த்த முடியும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் அமெரிக்கா புலனாய்வுத் துறை அதிகாரிகள்.
இதனிடையே அம்பாறையில் தொடர் தேடுதல் நடவடிக்கை நீடிப்பதால் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications