இலங்கையில் ‘ட்ரோன்’கள் மூலம் தாக்குதல்கள் நடத்தவும் சதி திட்டம்.. ’ஷாக்’ தகவல்கள்
Recommended Video
கொழும்பு: இலங்கையில் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்ல பறக்கும் குட்டி விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈஸ்டர் தினத்தின் போது நிகழ்த்தப்பட்ட கோர குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கையின் பல இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை மாகாணத்தின் பல இடங்களில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் ராணுவத்தினர் நேற்று முதல் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் தீவிரவாதிகள், ராணுவத்தினர் இடையே மோதலும் நடைபெற்றது.
இதுவரை 15 தீவிரவாதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் ட்ரோன்கள், வெடிகுண்டு ஜாக்கெட்டுகள், வெடிமருந்துகள் தயாரிக்க இரும்பு குண்டுகள் என ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றை ஆய்வு செய்த அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள், ஈராக் மற்றும் சிரியாவில் ட்ரோன்களில் வெடிகுண்டுகளை நிரப்பி அதன் மூலம் பல இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்தி இருக்கின்றனர். இலங்கையிலும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தவே அவர்கள் திட்டமிட்டிருந்தது அம்பலமாகி உள்ளது.
ஒரே நேரத்தில் அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கிவிட்டு அடுத்தடுத்த இடங்களில் குண்டுவெடிப்புகளை இந்த ட்ரோன்கள் மூலம் நிகழ்த்த முடியும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் அமெரிக்கா புலனாய்வுத் துறை அதிகாரிகள்.
இதனிடையே அம்பாறையில் தொடர் தேடுதல் நடவடிக்கை நீடிப்பதால் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications