அதிபர் மாளிகையை கைப்பற்றிய களிப்பு.. போராட்டக்காரர்களின் நள்ளிரவையும் தாண்டிய ஆட்டம், பாட்டம்
கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த களிப்பில் நள்ளிரவு 1.30 மணிக்கு உற்சாகமாக கொண்டாடிய போராட்டக்காரர்கள்.
இலங்கை பொருளாதார நெருக்கடியை கண்டித்து கடந்த 4 மாதங்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் மக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
விலை உயர்வு, மின்வெட்டு உள்ளிட்டவற்றால் கோபமடைந்த மக்கள் ஒரு கட்டத்தில் வன்முறையில் இறங்கினார்கள். பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகையை முற்றுகையிட்டு அவரை ஓடச் செய்தனர்.

ராஜபக்ச
மேலும் ராஜபக்சவின் வீடு, பாரம்பரிய வீடு ஆகியவற்றையும் தீ வைத்து எரித்தனர். இதையடுத்து அவர் பதவியிலிருந்து ஓடினார். பின்னர் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். ரணில் தலைமையில் புதிய அரசு அமைந்தும் எந்த பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை.

ஆத்திரம்
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் பலர் கண் எரிச்சலில் தவித்தனர். அவர்களுக்கு பொதுமக்களும் பாதுகாப்பு படையினரும் தண்ணீர் கொடுத்து உதவினர்.

போராட்டக்காரர்கள்
ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கு மக்களும் பாதுகாப்பு படையினரும் உதவி செய்தனர். இந்த நிலையில் அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். அதிபர் பயன்படுத்திய அத்தனை பொருட்களையும் பயன்படுத்தினர். அங்கிருந்த விதவிதமான உணவுகளை சுவைத்தனர்.

நீச்சல் குளம்
பின்னர் நீச்சல் குளத்தில் குதித்து மகிழ்ந்தனர். அதிபரின் சொகுசு காரையும் இயக்கி பார்த்தனர். மேலும் ரணிலின் அலரி மாளிகையையும் சூறையாடப்பட்டது. இதையடுத்து ரணில் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர் பதவி விலகுவதாக தெரிவித்திருந்தார். அது போல் கோத்தபயவும் வரும் 13 ஆம் தேதி பதவி விலகுவார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அதிபர் படுக்கையில்
இந்த நிலையில் அதிபர் மாளிகையில் இருந்த படுக்கையை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
அப்போது அதிபரின் படுக்கையில் படுத்துக் கொண்ட ஒரு போராட்டக்காரர், அதிபரே நன்றி, நான் உங்கள் படுக்கையில் படுத்திருக்கிறேன், நன்றாக இருக்கிறது என கூறி வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதிபர் மாளிகையை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் நள்ளிரவு 1.30 மணி ஆகியும் கொண்டாட்டத்தை கைவிடவில்லை. அங்கிருந்த மேஜைகளில் ஏறி நின்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அதிபர் மாளிகையே களைகட்டியது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications