நான் ராஜபக்சே சகோதரர்களின் கூட்டாளியா? யார் சொன்னது? பத்திரிகையாளர் கேள்விக்கு செம டென்ஷனான ரணில்
கொழும்பு: தாம் ராஜபக்சே கூட்டாளிகள் கிடையாது; ராஜபக்சேக்களுக்கு எதிராக அரசியல் செய்கிறேன் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 8-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். முன்னதாக ரணில் விக்கிரமசிங்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு எமது அரசு ஒத்துழைப்பு வழங்கும். ஆனால் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடம்தர முடியாது.

நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அனைத்து தரப்பும் ஏன் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது? என்பது மக்களின் கேள்வி. எதிர்ப்பு அரசியல் என்பது நாட்டை சூனியமாக்குகிறது என்பது இளைஞர்களின் கருத்து. இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் குரலுக்கும் நாம் செவிசாய்க்க வேண்டும்.
அமைதி வழி போராட்டங்களுக்கு அப்பால், வீடுகளை தீக்கிரையாக்குதல், ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுதல், பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றுதல் என்பது ஜனநாயக வழிப் போராட்டங்கள் அல்ல. ஆகையால்தான் அமைதி வழி போராட்டங்கள்தான் சரி என்கிறோம்.
இலங்கையின் அரசியல் சாசனப்படி எம்.பி.க்களால் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரையில் நான் ஒரே ஒரு எம்.பி. என்னால் இலங்கை நாட்டின் பிரதமரை எப்படி தேர்வு செய்ய முடியும்? அது குறித்து ஆலோசிக்கிறோம்.
ராஜபக்சே சகோதரர்களுக்கு எப்படி நான் நண்பராக இருக்க முடியும்? அனைத்து சந்தர்ப்பங்களிலும் ராஜபக்சேக்களை நான் எதிர்த்தே அரசியல் செய்திருக்கிறேன். நான் ராஜபக்சேக்களின் நண்பன் அல்ல. இந்த நாட்டின் மக்கள். ஆகையால் தெளிவான சிந்தனையுடன் என்னை நோக்கி கேள்விகளை முன்வையுங்கள். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications