புலிகளின் யுத்தத்தை 'முடிக்க 'விரும்பிய இந்தியா-. கடைசி புல்லட் வரை சந்தித்த பிரபாகரன் ... பொன்சேகா
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை இந்தியா நிறுத்த விரும்பியது இல்லை- அதனை முடித்துவிட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என்று இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
Recommended Video
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சரத் பொன்சேகா கூறியதாவது:

தீர்மானிக்கும் சக்தி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடைசி துப்பாக்கி குண்டு வரை எதிர்கொண்டார். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை எப்போதும் இருக்கிறது. பிரபாகரன் அமைதி வழியை ஏற்று அரசியலுக்கு திரும்பியிருக்கலாம். அவர் அரசியலில் இருந்திருந்தால் இப்போது மிகப் பெரிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்பார்.

சர்வதேச நாடுகள் உதவி
விடுதலைப் புலிகளின் கே.பி, கருணா, பிள்ளையான் போன்றவர்கள் இலங்கை அரசியல்வாதிகளுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். பிரபாகரனும் அப்படி செய்திருந்தால் ஒட்டுமொத்த வடக்கும் கிழகும் அவரது கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்திருக்கும். விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச நாடுகள் நிதி உதவியும் ஆயுத உதவியும் அளித்திருந்தன.

யுத்த நிறுத்த முயற்சி
2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மேற்கு உலக நாடுகள் அந்த போரை எப்படியாவது தற்காலிகமாக நிறுத்தலாம் என முனைப்பு காட்டின. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அப்போது பாகிஸ்தான், சீனா ஆகியவை எங்களுக்கு ஆயுத உதவியும் கொடுத்தன. இந்தியாவின் நிலைப்பாடு அப்போது வேறானதாக இருந்தது.

இந்தியாவின் நிலைப்பாடு இதுதான்
இந்தியாவைப் பொறுத்தவரை புலிகளுடனான யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விரும்பவும் இல்லை- ஏற்கவும் இல்லை. அதற்கு எதிராக விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடித்தேவிடலாம் என்பதாக மட்டுமே இந்தியாவின் நிலைப்பாடு இருந்தது. தாங்கள் சொன்னதை பிரபாகரன் கேட்கவில்லை என்கிற கோபம் முதலில் இந்தியாவுக்கு இருந்தது. பின்னர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதால் அந்த கோபம் மிக அதிகமாக இந்தியாவுக்கு இருந்தது. இவ்வாறு சரத்பொன்சேகா கூறினார்.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications