மோடி பதவி ஏற்பு விழா... இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மோடி வரும் 30-ந் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார். கடந்த 2014-ல் மோடி, பிரதமராக பதவி ஏற்றபோது அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு எதிராக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தற்போதைய தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு மரண அடி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பங்கேற்கக் கூடும் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications