ஆட்சியிலிருந்து விரட்டப்படும் கோத்தபய ராஜபக்ச.. நாட்டின் அடுத்த இடைக்கால பிரதமர் யார்?
கொழும்பு: இலங்கை பிரதமராகவோ இல்லை சபாநாயகராகவோ சபாநாயகர் மஹிந்தயப்பா அபய்வர்தனே பொறுப்பேற்கிறார். இவர் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்கவே நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கின. மேலும் பணம் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.
இதனால் ராஜபக்ச குடும்பத்தினர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதற்காக வீதிகளில் இறங்கி போராட்டத்தையும் முன் வைத்தனர்.

பிரதமர்
இதன் பலனாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகி, அலரி மாளிகையை விட்டே ஓடிவிட்டார். பின்னர் பிரதமராக ரணில் விக்கிரமதுங்க பொறுப்பேற்றார். அவர் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த சில முன்னெடுப்புகளை எடுத்தார். ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை.

பசி பட்டினி
இதையடுத்து பசி, பட்டினியால் வாடும் போராட்டக்காரர்கள் நேராக அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அங்கு அவர்களை பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விரட்டினர். எனினும் பாதுகாப்பு படையினரால் பெருமளவில் கூடிய போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

போராட்டக்காரர்கள்
ஒரு கட்டத்தில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் போராட்டக்காரர்களுக்கு உதவினர். பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் போராட்டக்காரர்களுடன் இணைந்தார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோத்தபய
இதையடுத்து கோத்தபயவும் ரணிலும் பதவி விலக கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து ரணில் நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி பதவி விலகுவதாக அறிவித்தார். நீண்ட இழுபறிக்கு பிறகு கோத்தபயாவும் வரும் 13 ஆம் தேதி பதவி விலகுவதாக சபாநாயகர் மூலம் அறிவித்துள்ளார்.

பிரதமரா இல்லை அதிபரா
இதையடுத்து அந்த நாட்டின் இடைக்கால அதிபராக சபாநாயகர் மஹிந்தயப்பா அபய்வர்தனே பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் இடைக்கால பிரதமராகவும் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போதைய சூழலில் மீண்டும் தேர்தலை நடத்தும் அளவுக்கு பண வசதி இல்லை. எனவே அபய்வர்த்தனே பிரதமராகிறாரா இல்லை அதிபராகிறாரா என்பது தெரியவில்லை.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications