இலங்கை அதிபர் சிறிசேனா முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை.. புதிய பரபரப்பு!
இன்று காலை இலங்கை அதிபர் சிறிசேனா முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கொழும்பு: இன்று காலை இலங்கை அதிபர் சிறிசேனா முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இலங்கை அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இன்று அங்கு நாடாளுமன்றம் கூட இருக்கிறது. இதையடுத்து இலங்கை தலைநகர் முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையின் பிரதமராக ரணில் பதவி ஏற்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக இன்று அவர் பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வருகிறது. இன்று நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் அதிபர் சிறிசேனா முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று கூடுகிறது
இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார். இதில் ரணில் விக்ரமசிங்கே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வருகிறது. நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

ஆலோசனை நடத்தினார்
இந்த நிலையில் இன்று இலங்கை அதிபர் சிறிசேனா முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று பாதுகாப்பு அமைச்சரவையை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இன்று நடந்த ஆலோசனையில் மூன்று படையை சேர்ந்த தளபதிகளும், உயர் ரேங்க் வீரர்களும் கலந்து கொண்டனர்.

என்ன ஆலோசனை
ஆனால் சிறிசேனா ஆலோசனையில் என்ன விவாதம் செய்தார் என்ற விவரம் வெளியாகவில்லை. இலங்கையின் பாதுகாப்பு குறித்தும், சட்ட ஒழுங்கு குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றம் கூட நிலையில் இவர்கள் ஆலோசனை செய்த காரணத்தால் இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அனைத்து கட்சி கூட்டம்
இதற்கு இடையில் இன்னும் சற்று நேரத்தில் அங்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. நாடாளுமன்றம் கூடும் முன் அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications