பலாத்கார குற்றவாளி நித்தியானந்தா தஞ்சம் கோரினாரா? இலங்கை ஜனாதிபதி ரணில் ஆபீஸ் சொன்ன பதில் இதுதான்!
கொழும்பு: இந்தியாவில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா என்ற போலி சாமியார் தமக்கு தஞ்சம் கோரி இலங்கை அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பியதாக வெளியான செய்திகள் குறித்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் திருவண்ணாமலையில் நடைபாதை சாமியார்களில் ஒருவராக இருந்தவர் நித்தியானந்தா. செல்வந்தர்களால் திடீர் செல்வாக்கு பெற்று ஊடகங்களில் ஆன்மீகத் தொடர் எழுதினார். இதனையடுத்து நித்தியானந்தா சாமியாரை ஏராளமானோர் தேடி வரத் தொடங்கினர்.

சர்சசையில் நித்தியானந்தா
இதனால் நித்தியானந்தாவின் சாம்ராஜ்ஜியம் விரிவடைந்தது. தமிழகத்தைப் போல பெங்களூரு, குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் ஆசிரமங்களை உருவாக்கினார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நித்தியானந்தாவுக்கு கிளைகள் உருவாகின.இந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா படுக்கை அறையில் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கைலாசா பரபரப்பு
இதனைத் தொடர்ந்து நித்தியானந்தா மீது ஏராளமான புகார்களும் வழக்குகளும் வரிசைகட்டத் தொடங்கின. நித்தியானந்தாவுக்கு எதிரான பிடி இறுகத் தொடங்கியதால் தப்பி ஓடிக் கொண்டிருந்தார். அவருக்கு எதிராக விசாரணை அமைப்புகள் நோட்டீஸ் வெளியிட்டன. அப்போதுதான் தாம் கைலாசா என்ற தனிநாட்டை தொடங்கிவிட்டதாக நித்தியானந்தா அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துடன் சமூக ஊடகங்களில் இடைவிடாமல் தம்முடைய சோ கால்ட் ஆன்மீக பிரசாரத்தை முன்னெடுத்தும் வந்தார்.

மரணப் படுக்கையில்..
தமிழ்நாட்டின் பல பிரச்சனைகளுக்கும் கருத்து தெரிவித்து சமூகவலைதளங்களில் வாங்கிக் கட்டிக் கொண்டார். அண்மையில் உடல்நலன் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் கிடப்பதாக நித்தியானந்தாவே செய்திகளை வெளியிட்டார். பின்னர்தாமே நலமடைந்துவிட்டதாகவும் 2.0 வெர்சன் எனவும் காமெடி செய்து கொண்டிருந்தார்.

இலங்கையில் தஞ்சமா?
தற்போது தமக்கு உடல்நலன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது; ஆகையால் இலங்கை அரசாங்கம், சிகிச்சைக்காக இடம் தந்து உதவ வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கே அலுவலகத்தை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொன்டு கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்த ரணில் விக்கிரமசிங்கே அலுவலகம், நித்தியானந்தா சார்பில் ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள்தான் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. ஒருநபர் தஞ்சமடையும் கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாகத்தான் அனுப்ப வேண்டும்; சாதாரணமான தபாலில் அனுப்பிவிட முடியாது என்றார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications