இலங்கை: பவுத்த பிக்கு போராட்டம் எதிரொலி- முஸ்லிம் ஆளுநர்கள், அமைச்சர்கள் ராஜினாமா
கொழும்பு: இலங்கையில் பவுத்த பிக்குவும் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரரின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிரொலியாக முஸ்லிம் ஆளுநர்கள் மற்றும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர். இதனையடுத்து அத்துரலிய ரத்ன தேரர் தமது போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்களில் 359 பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய இத்தாக்குதல் உலகை உறைய வைத்தது.

சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். அமைப்பு, இலங்கையில் முகாம்கள் அமைத்து இக்கொடூர செயலில் ஈடுபட்டிருந்தது. இதையடுத்து ஐ.எஸ். இயக்கத்திடம் பயிற்சி பெற்ற பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இப்படி கைது செய்யப்பட்டோருக்கும் முஸ்லிம் ஆளுநர்கள் ஹிஸ்புல்லா, அசாத் ஸாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவர்கள் அனைவருமே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்தனர்.
இந்நிலையில் பவுத்த பிக்குவும் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரர் வெள்ளிக்கிழமையன்று சர்ச்சைக்குரிய முஸ்லிம் ஆளுநர்கள், முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டி தலதா மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டம் தொடர்ந்ததால் இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்களருக்கும் இடையே இனமோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
மேலும் அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பவுத்த பிக்குகள் போராட்டத்தில் குதிப்போம் என பவுத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனாவும் எச்சரித்தது. இதனால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆளுநர்கல் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் ஸாலி இருவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை எழுத்துப்பூர்வமாக இன்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தனர். அதேபோல் ரிசாத் பதியுதீன் மற்றும் முஸ்லிம் இணை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது எனவும் முடிவு எடுத்துள்ளனர்.
இதனையடுத்து அத்துரலிய ரத்ன தேரர் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் கண்டியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications