Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது- 7 நாட்களில் புதிய ஜனாதிபதி தேர்வு: சபாநாயகர் மஹிந்த யாப்பா

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வது தொடர்பாக நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

இலங்கையைவிட்டு தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே, சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு தமது ராஜினாமா கடிதத்தை அனுப்பி இருந்தார். இந்த ராஜினாமா கடிதம் உண்மையானதுதான்; இதனை ஏற்றுக் கொள்கிறோம் என்று இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவித்தார்.

Srilanka Parliament to meet tomorrow; new President to be elected within 7 days

இன்று காலை கொழும்பில் செய்தியாளர்களிடம் மஹிந்த யாப்பா கூறியதாவது: புதிய ஜனாதிபதி நியமனம் தொடர்பான நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்க உள்ளது. இதற்காக நாளை நாடாளுமன்றத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 7 நாட்களில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் நாடாளுமன்ற நடைமுறைகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படி புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க தேவையான நாடாளுமன்ற நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதுதான் தங்களது பணி. இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.ஆகையால் ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைத்து தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

மேலும் தெற்காசியாவின் பழமையான நாடுகளில் இலங்கை மிக முக்கியமானது. இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்வானது உலக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதாகவும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுதந்திரமாக, மனசாட்சியுடன் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான அமைதியான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றார் சபாநாயகர் மஹிந்த யாப்பா.

முன்னதாக கோத்தபாய ராஜபக்சே அனுப்பிய ராஜினாமா கடித்த்தில் கையெழுத்து இடம்பெறவில்லை என ஒரு தகவல் பரவியது. இதனால் கோத்தபாயவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்தது. ஆனால் சபாநாயகர், கோத்தபாயவின் ராஜினாமாவை ஏற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Recommended Video

    Srilankaவின் அடுத்த அதிபர் யார்?

    இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்பார்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கையின் தற்காலிக பிரதமராக பதவியேற்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+