இலங்கை: தற்காலிக ஜனாதிபதியாக ரணில் பதவியேற்றார்- ஜூலை 20-ல் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டதை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்றார். இலங்கையின் புதிய ஜனாதிபதி தொடர்பான வாக்கெடுப்பு வரும் 20-ந் தேதி நடைபெறும்.
இலங்கையில் மக்கள் கிளர்ச்சியை தாங்க முடியாமல் நாட்டை விட்டு தப்பி ஓடினார் கோத்தபாய ராஜபக்சே. இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு முதலில் தப்பி ஓடிய கோத்தபாய, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் இருந்து சவுதிக்கு அகதியாக கோத்தபாய செல்லக் கூடும் என கூறப்படுகிறது.

அத்துடன் சிங்கப்பூரில் இருந்து தமது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு கோத்தபாய அனுப்பி இருந்தார். இதனை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா இன்று அறிவித்தார். இதனையடுத்து நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்றார். இலங்கை தலைமை நீதிபதி முன்னிலையில், தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.
இந்நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு ஜூலை 20-ந் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக ஜூலை 19-ந் தேதி வேட்புமனுக்கள் பெறப்பட உள்ளது.
இலங்கை ஜனாதிபதி பதவி காலியானால் அதிகபட்சம் 1 மாதத்துக்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். ஜனாதிபதி பதவி காலியான உடனேயே 3 நாட்களில் நாடாளுமன்றம் முதலில் கூட்டப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பதவி காலியாகிவிட்டதாக அறிவிப்பு வெளியிடப்படும்.
மேலும் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கும். ஜனாதிபதி பதவிக்கு யாரை முன்மொழிகிறோம் என எம்.பிக்கள் தெரிவிக்க வேண்டும். ஒருவருக்கு மேற்பட்டோர் முன்மொழியப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும். வேட்புமனுக்களைப் பெற்ற 48 மணிநேரத்துக்குள் வாக்கெடுப்புகள் நடத்த வேண்டும்.
ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நாடாளுமன்ற செயலாளர்தான் தேர்தல் அதிகாரியாக இருப்பார். புதிய ஜனாதிபதிக்கு தேர்தல் நடத்தப்பட்டால் எம்.பி.க்கள் வாக்குச் சீட்டில் வாக்குகளை செலுத்த வேண்டும். வாக்களிப்பு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணப்படும். அதனடிப்படையில் இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என்பதும் அறிவிக்கப்படும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications