இலங்கை: தற்காலிக ஜனாதிபதியாக ரணில் பதவியேற்றார்- ஜூலை 20-ல் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டதை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்றார். இலங்கையின் புதிய ஜனாதிபதி தொடர்பான வாக்கெடுப்பு வரும் 20-ந் தேதி நடைபெறும்.
இலங்கையில் மக்கள் கிளர்ச்சியை தாங்க முடியாமல் நாட்டை விட்டு தப்பி ஓடினார் கோத்தபாய ராஜபக்சே. இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு முதலில் தப்பி ஓடிய கோத்தபாய, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் இருந்து சவுதிக்கு அகதியாக கோத்தபாய செல்லக் கூடும் என கூறப்படுகிறது.

அத்துடன் சிங்கப்பூரில் இருந்து தமது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு கோத்தபாய அனுப்பி இருந்தார். இதனை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா இன்று அறிவித்தார். இதனையடுத்து நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்றார். இலங்கை தலைமை நீதிபதி முன்னிலையில், தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.
இந்நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு ஜூலை 20-ந் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக ஜூலை 19-ந் தேதி வேட்புமனுக்கள் பெறப்பட உள்ளது.
இலங்கை ஜனாதிபதி பதவி காலியானால் அதிகபட்சம் 1 மாதத்துக்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். ஜனாதிபதி பதவி காலியான உடனேயே 3 நாட்களில் நாடாளுமன்றம் முதலில் கூட்டப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பதவி காலியாகிவிட்டதாக அறிவிப்பு வெளியிடப்படும்.
மேலும் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கும். ஜனாதிபதி பதவிக்கு யாரை முன்மொழிகிறோம் என எம்.பிக்கள் தெரிவிக்க வேண்டும். ஒருவருக்கு மேற்பட்டோர் முன்மொழியப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும். வேட்புமனுக்களைப் பெற்ற 48 மணிநேரத்துக்குள் வாக்கெடுப்புகள் நடத்த வேண்டும்.
ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நாடாளுமன்ற செயலாளர்தான் தேர்தல் அதிகாரியாக இருப்பார். புதிய ஜனாதிபதிக்கு தேர்தல் நடத்தப்பட்டால் எம்.பி.க்கள் வாக்குச் சீட்டில் வாக்குகளை செலுத்த வேண்டும். வாக்களிப்பு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணப்படும். அதனடிப்படையில் இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என்பதும் அறிவிக்கப்படும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications