Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று இலங்கை ஜனாதிபதி தேர்வு-ராஜபக்சேக்களின் கூட்டாளி டலஸ் அழகப்பெருமவுக்கு ஈழத்தமிழ் கட்சிகள் ஆதரவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் இடைக்கால ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசநாயக்க, டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுக்கின்றனர். டலஸ் அழகப்பெருமாவுக்கு பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. ராஜபக்சேக்களின் ஆதரவாளரான டலஸ் அழகப்பெருமாவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரிப்பது சர்ச்சையாகி உள்ளது.

இலங்கையில் பொருளாதார சீரழிவை மேம்படுத்த முடியாமல் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே விலகினார். தற்போது சிங்கப்பூரில் பதுங்கி உள்ளார் கோத்தபாய ராஜபக்சே.

 Srilanka Presidential Election: TNA supports Dullas Alahapperuma MP

கோத்தபாய ராஜபக்சே பதவி விலகியதால் இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். இலங்கை அரசியல் சாசனப்படி, ஜனாதிபதி ஒருவர் பதவி விலகினால் அல்லது இல்லாமல் போனால் நாடாளுமன்ற எம்.பி.க்கள்தான் வாக்களித்து ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதனடிப்படையில் திங்கள்கிழமையன்று இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. ரணில் விக்கிரமசிங்கே, அனுர குமார திசநாயக்க, டலஸ் அழகப்பெரும ஆகியோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இலங்கை எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச, கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார்.

இலங்கை நாடாளுமன்ற நியமன எம்.பி.யாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே ஏற்கனவே பிரதமராக நியமிக்கப்பட்ட போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் கோத்தபாய ராஜபக்சே ராஜினாமாவா தற்காலிக ஜனாதிபதியானார் ரணில். அத்துடன் இலங்கையில் அவசரநிலையையும் ரணில் விக்கிரமசிங்கே பிரகடனம் செய்தார். இது பொதுமக்களை கடும் அதிர்ச்சியும் கோபமும் கொள்ள வைத்துள்ளது. ராஜபக்சே குடும்பத்தினரின் கூட்டாளியான ரணில் விக்கிரமசிங்கே எந்த அரசு பதவியும் வகிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் வெடித்துள்ளன.

Recommended Video

    Ranil Wickremesinghe அதிபரானார்.. Srilanka-வின் சிக்கல் தீருமா?

    இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமாவை ஆதரிப்பது என இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. ஈழத் தமிழர் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அக்கூட்டத்தில் டலஸ் அழகப்பெருமாவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் வாக்களிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. ராஜபக்சேக்களின் மிக தீவிரமான ஆதரவாளரான டலஸ் அழகப்பெருமாவை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேட்சை எம்.பிக்கள் குழு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவை டலஸ் அழகப்பெருமாவை ஆதரிப்பது என முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+