அதிபராகும் கோத்தபய.. விரைவில் மகிந்த ராஜபக்சேவிற்கு பிரதமர் பதவி.. எச்சரிக்கும் வல்லுநர்கள்!
இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றபின் விரைவில் மகிந்த ராஜபக்சேவிற்கு உயர் பதவிகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Recommended Video
கொழும்பு: இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றபின் விரைவில் மகிந்த ராஜபக்சேவிற்கு உயர் பதவிகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இன்று மாலைதான் அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும்
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்க இருக்கிறார். ஏற்கனவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நந்தசேனா கோத்தபய ராஜபக்சே தான் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்துவிட்டார்.

உயர் பதவி
இந்த நிலையில் இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றபின் விரைவில் மகிந்த ராஜபக்சேவிற்கு உயர் பதவிகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதன்படி பெரும்பாலும் இலங்கையின் பிரதமர் பதவிக்கு மீண்டும் ராஜபக்சே திட்டம் போடுவார் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தபய ராஜபக்சே ஆட்சி
கோத்தபய ராஜபக்சே ஆட்சிக்கு வந்தால் மகிந்தாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். விரைவில் இலங்கையில் அரசியல் மாற்றங்கள் நடக்கும். பிரதமர் ரணிலுக்கு ஆதரவு கம்மியாக இருக்கிறது. விரைவில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழும் நிலை உருவாகும் என்கிறார்கள்.

இதேபோல் முன்பு
இதேபோல் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ரணில் விக்ரமசிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் மகிந்த ராஜபக்சே தனது மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் பதவி விலக நேரிட்டது.

சிறிசேனா எப்படி
அப்போது மைத்ரிபால சிறிசேனா செய்ததை ஆட்சிக்கு வந்ததும் கோத்தபய செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள். என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

குடும்பம் எப்படி
ஆனால் தன்னுடைய குடும்பத்தை அரசியலுக்குள் கொண்டு வர மாட்டேன் என்று கோத்தபய ராஜபக்சே பிரச்சாரத்தில் தெரிவித்தார். நான் என் குடும்பத்தில் யாருக்கும் உயர் பதவி வழங்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் குறைந்தபட்சம் மகிந்த ராஜபக்சே அரசை பின்னிருந்தாவது இயக்குவார் என்கிறார்கள்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications