இலங்கை தேர்தல்.. சஜித் பிரேமதாசவிற்கு தமிழர்கள் மாஸ் ஆதரவு.. வடக்கு மாகாணத்தில் கோத்தபய பின்னடைவு!
தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிக்கிறார்.
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிக்கிறார். வடக்கு மாகாணத்தில் கோத்தபய ராஜபக்சே பின்னடைவை சந்தித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததால் அங்கு தேர்தல் நடந்துள்ளது. இதனால் இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு முடிந்து நேற்று இரவில் இருந்து வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. நாளை மாலைக்குள் இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமாக எப்படி
இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசவை விட 90697 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே 1516260 வாக்குகள் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 14255623 வாக்குகள் பெற்றுள்ளார்.

எப்படி முன்னிலை
ஆனால் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிக்கிறார்கள். அங்கு உள்ள மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அபார முன்னிலை பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சேவை விட சஜித் லட்சக் கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

என்ன ஆதரவு
தமிழரசுக் கட்சி உள்ளிட்டவை சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறது. இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தனர். அதனால் தமிழர்கள் வாக்கு சஜித் பிரேமதாசவிற்கு அதிகமாக சென்றுள்ளது. உதாரணமாகயாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் சஜித் பிரேமதாச கோத்தபய ராஜபக்சேவை விட 2.40 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

ஆனால் என்ன
ஆனால் தெற்கு மாகாணங்களில் கோத்தபய ராஜபக்சே அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அவர் முன்னிற்கு வகிக்கிறார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 55,585 வாக்குகள் பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே வெறும் 3,238 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு எங்கு
அதேபோல் மன்னார் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 53,602 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 6,435 பெற்றுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 47,594 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 4,252 பெற்றுள்ளார். வவுனியா மாவட்டத்தில் சஜித் பிரேமதாச - 65,141 பெற்றுள்ளார். கோத்தபய ராஜபக்சே - 13,715 பெற்றுள்ளார்.
-
சிவகார்த்திகேயனுக்கு சனி பிடித்துவிட்டது.. நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு.. மீண்டும் சிக்கிய தவெக -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications