இலங்கை நாடாளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி- போராட்டக்காரர்கள் மீது சரமாரி கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு!
கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்ற படையெடுக்கின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றம் அருகே குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினர் சரமாரியாக கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்

இலங்கையில் ஜூலை 9-ந் தேதி ஜனாதிபதி மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். ராணுவத்தின் கடும் அடக்குமுறையை மீறி பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் தேசியக் கொடியை பறக்கவிட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, போராட்டக்காரர்கள் பாசிசப் பாதையில் செல்கின்றனர். கடற்படை, விமானப் படை தளபதிகளின் வீடுகளையும் முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்; அதனால்தான் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

இதனிடையே நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளை அதிவேகமாக முன்னெடுக்க வேண்டும்; அடுத்ததாக நாடாளுமன்றத்தையும் பொதுமக்கள் கைப்பற்றுவோம்; நாடாளுமன்றத்துக்குள் ஒரு எம்.பி.யும் உள்ளே நுழைய முடியாத வகையில் தடுத்து நிறுத்துவோம் என அறிவித்துள்ளனர்.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவால் அமல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரக்காலச் சட்டத்தை நாய்கூட மதிக்காது என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கூறியுள்ளார். ஆகையால் அவசரக்காலச் சட்டத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம்; ரணிலும் பதவி விலக வேண்டுமென்றே மக்கள் போராடுகிறார்கள் என்றும் வசந்த முதலிகே தெரிவித்தார்.
Recommended Video

மேலும் இலங்கையில் தொடர்ந்து அசாதாரண நிலைமை நீடிப்பதால் அமெரிக்கா தூதரகம் அடுத்த 2 நாட்களுக்கு மூடப்படும் என அறிவித்துள்ளது. இலங்கையில் இதே நிலைமை நீடித்தால் அரசாங்கம், பயங்கரவாத தடை சட்டத்தையும் ஏவிவிடக் கூடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தற்போது போராட்டக்காரர்கள் அறிவித்தபடி நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பாதுகாப்பை மீறி நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சிக்கின்றனர். இதனைத் தடுக்க போராட்டக்காரர்கள் மீது இலங்கை ராணுவம் சரமாரி கண்ணீர்புகை குண்டுகளை வீசி வருகிறது. இதனால் கொழும்பில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications