தென்னை மரத்தின் மீது பிரஸ்மீட்.. சரசரவெனெ ஏறி விட்டு இறங்கத் தெரியாமல் திணறிய அமைச்சர்!
தென்னை மரங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தென்னை மரம் ஏறினார் இலங்கை அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ.
கொழும்பு: தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பற்றாக்குறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் இலங்கை அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ.
இலங்கையின் பிரதான விவசாயத்தில் தென்னைக்கு மிக முக்கிய இடமுண்டு. ஆனால் தற்போது இலங்கையில் தென்னை விளைச்சல் குறைந்திருப்பதால் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தார் இலங்கையின் தேங்காய், கிதுல், பாமிரா மற்றும் ரப்பர் சாகுபடி மற்றும் அதன் தொழில்துறை தயாரிப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் ஆகியவற்றின் மாநில அமைச்சராக இருக்கும் அருந்திகா பெர்னாண்டோ. இதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி மிகவும் வித்தியாசமானது.

மரத்தில் பிரஸ்மீட்
டன்கோடுவாவில் உள்ள தனது தென்னந்தோப்புக்கு பத்திரிகையாளர்களை அழைத்து சென்றார் பெர்னாண்டோ. அங்குள்ள ஒரு தென்னை மரத்தில் ஏறி அமர்ந்தபடி அவர் பத்திரிகையாளர்களுடன் உரையாற்றினார். அப்போது தென்னையின் தேவை பற்றி அவர் பேசினார்.

தேங்காய் பற்றாக்குறை
"உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு மற்றும் உள்நாட்டு நுகர்வுக்கு தேவையான 70 கோடி தேங்காய்கள் நாட்டில் பற்றாக்குறையாக உள்ளது. தென்னை மரங்களை வளர்ப்பதற்கு கிடைக்கக் கூடிய ஒவ்வொரு நில பகுதியையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேங்காய் தொழிற்சாலையை ஊக்கப்படுத்த வேண்டும்.

அரசு யோசனை
இதனால் நாட்டின் அந்நிய செலாவணி உயரும். தேங்காய் விலை விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில், நாட்டில் தேங்காய் பற்றாக்குறையை முன்னிட்டு அதன் விலையை குறைக்க அரசு யோசித்து வருகிறது" என மரத்தில் இருந்தபடியே அருந்திகா பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தேவையா?
பின்னர் அவர் மரத்தில் இருந்து இறங்க முயன்றார். ஏறும் போது எளிதாக ஏறிவிட்ட அருந்திகாவால, இறங்கும் போது அத்தனை எளிதாக இறங்க முடியவில்லை. அவரை மரத்தில் இருந்து கீழே இறக்குவதற்குள், அவரது உதவியாளர்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. இதெல்லாம் தேவையா என பத்திரிகையாளர்கள் கிண்டல் செய்தபடியே அங்கிருந்து கிளம்பினர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications