Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விபரீதம்.. விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. கடலூரில் சோகம்!

Subscribe to Oneindia Tamil

3-people-died-in-cuddalore-due-to-gas-attack-while-cleaning-sewage-tank
கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது அந்த வீட்டின் உரிமையாளர் உள்பட 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே கானூர் மாஞ்சாலை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. நேற்று கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இந்த பணியில் கொத்தனாரான பாலச்சந்திரன் மற்றும் சக்திவேல் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியும் அவர்களுடன் வேலை செய்துகொண்டு இருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக விஷவாயு தாக்கி அவர்கள் 3 பேரும் பலியாகியுள்ளனர். கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 10 நிமிடங்களில் விஷவாயு தாக்கி அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ வாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+