"தனியா வரியா?".. கணவரின் இறப்பு சான்றிதழில் திருத்தம் கோரிய பெண்.. தனியாக அழைத்த விஏஓ
கடலூர்: பண்ருட்டி அருகே தனது கணவரின் இறப்பு சான்றிதழில் பிழை திருத்தம் செய்ய அணுகிய பெண்ணை தனியாக வருமாறு விஏஓ ஒருவர் அழைத்துள்ளார்.
இது தொடர்பான செல்போன் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண்ணுக்கு ஆதரவாக குரலும் மேலெழுந்துள்ளது.

சான்றிதழில் திருத்தம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள உறையூர் கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி என்பவரது கணவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு இறப்பு சான்றிதழ் பெறப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ்வாறு இருக்கையில் இறப்பு சான்றிதழை சரிபார்க்கையில் அதில் பிழை இருந்துள்ளது. எனவே திருத்தம் மேற்கொள்ள அவர் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) வெங்கடாச்சலத்தை அணுகியுள்ளார். ஆனால் இந்த பணியை விஏஓ தொடர்ந்து கிடப்பில் போட்டுள்ளார்.

தனியாக வரவேண்டும்
ஒரு வழியாக விஏஓ-வின் தொலைப்பேசி எண்ணை பெற்ற பெரியநாயகி அவரிடம் திருத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு மழுப்பலாக பதிலளித்த விஏஓ வெங்கடாச்சலம், பெரியநாயகியை வீட்டிற்கு வர சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் தன்னால் தனியாக வர முடியாது என்றும் தனது சகோதரர் உடன் வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இதற்கு வெங்கடாச்சலம் மறுப்பு தெரிவித்து திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனில் தனியாகதான் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

நடவடிக்கை வேண்டும்
தற்போது இது தொடர்பான ஆடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த ஆடியோவை ஆதராமாக கொண்டு விஏஓ வெங்கடாச்சலம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். வெங்கடாச்சலம் மீது இது போன்ற ஆபாச பேச்சு தொடர்பான குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே பலமுறை வந்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இம்மாதிரியான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காவல்துறையும் அவ்வப்போது கூறி வருகிறது.

தமிழக நிலைமை
பெண்களை போகப் பொருளாக பார்ப்பதுதான் இந்த மாதிரியான குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெண்களை போக பொருளாக காட்சிப்படுத்தும் விளம்பரங்கள், திரைப்படங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றை புறக்கணிப்பதன் மூலம் மட்டுமே ஆண்கள் மத்தியில் உளவியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களாக வடமாநிலங்களே இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே இதுபோன்று நிகழும் பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications