பாப்பாவுக்கு வயசு என்ன.. நடுரோட்டில் பைக்கை மடக்கி.. தம்பதிக்கு மன உளைச்சலை தந்த எஸ்ஐ டிரான்ஸ்பர்!
சிதம்பரம் எஸ்ஐ உள்ளிட்ட 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
Recommended Video
சிதம்பரம்: பாப்பாவுக்கு வயசு என்ன, வீட்டிலேயே விட்டுட்டு வந்திருக்க வேண்டியதுதானே என்று டூவீலரில் வந்த தம்பதியை கேட்ட எஸ்ஐ உள்ளிட்ட 2 போலீசாரையும் எஸ்பி ஆயுத படைக்கு மாற்றி தூக்கி அடித்துள்ளார்.
சிதம்பரம் நகரில் கஞ்சித் தொட்டி அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்ஐ வேல்முருகனும், போலீஸ் சார்லஸும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அந்த பக்கமாக மனைவி குழந்தைகளுடன், ஒரு இளைஞர் டூவீலரில் வரவும் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதற்கு அந்நபர், "நான்தான் ஹெல்மட் போட்டிருக்கேனே" என்றார்.

இதான் சட்டம்
பிறகு, "இது பெயர் டூவீலர், 2 பேர்தான் வரணும், குழந்தைகளை கூட்டிட்டு வரக்கூடாது" என்று போலீசார் கூறினர். அதற்கு, அந்த நபர், "இது என்ன சார் அநியாயமா இருக்கு.. குழந்தைகளை எப்படி சார் வீட்டில் விட்டுட்டு வர முடியும்" என்று கேட்க, "அது உங்க பிரச்சனை, சட்டம் இதுதான்" என்றார்.

ஆர்சி புக்
மேலும் ஆர்சி புக் ஒரிஜினல்தான் வேண்டும் என்று கேட்டு கெடுபிடி செய்துள்ளார். அங்கிருந்த மக்கள் இந்த தம்பதிக்கு ஆதரவாக பேசியும், ஒரு கட்டத்தில் அந்த நபரின் மனைவி குழந்தைகளை காட்டி கெஞ்சியும் 2 போலீசாரும் மனம் இரங்கவில்லை. நடுரோட்டில் நடந்த இந்த வாக்குவாதம் வீடியோவாகவும் வெளிவந்தது.

அதிர்ச்சி
பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹெல்மட், வண்டிக்கான பேப்பர்ஸ் இவ்வளவு இருந்தும் ஏன் போலீசார் இப்படி நடந்து கொண்டனர், சட்டம் என்னதான சொல்கிறது? டூவீலரில் குழந்தையை கூட்டிக் கொண்டு வரக்கூடாதா என்ற பல விவாதங்கள் நேற்று முதல் நடந்து வருகின்றன.

மாற்றம்
மக்களிடம் கடுமையான அதிர்வலைகளை அடுத்து, சப்- இன்ஸ்பெக்டர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகியோரை கடலூர் ஆயுதப் படைக்கு மாற்றி எஸ்பி அபினவ் உத்தரவிட்டுள்ளார். தம்பதியருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக இவர்கள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.

புலம்பல்
எத்தனையோ போலீசார் தங்கள் கடமையை சரியாக செய்து வரும் நிலையில்.. ஞாயிற்றுக்கிழமைகளில்கூட பணியினை சிறப்பாக செய்து வரும்நிலையில்... இப்படி ஒன்றிரண்டு போலீசாரால் எல்லாருக்குமே கெட்ட பெயர் ஆகிறதே என்ற புலம்பலும் எழுந்து வருகிறது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications