போலீசார் அனுமதி மறுத்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய அதிமுக எம்.எல்.ஏ.. நெய்வேலியில் பரபர!
கடலூர்: என்எல்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் புவனகிரியில் உள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் புதிய பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை கடந்த 26ஆம் தேதி என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியது. மேல் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், நெற்பயிர்களை அழித்து கால்வாய் தோண்டும் பணிகளை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

நிலங்களில் விவசாயிகள் பயிர் செய்திருந்த நிலையில் அவற்றை அழித்து கால்வாய் வெட்டும் பணி நடைபெறுவதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து பாமக சார்பில் நெய்வேலி என்.எல்.சி முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர்.
அப்போது வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தால் என்எல்சி நிறுவனம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாமக நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் விவசாயிகளை வஞ்சித்து அடக்குமுறை மூலம் என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் எடுத்துக் கொடுக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் அழிக்கும் திமுக அரசை கண்டித்து வளையமாதேவியில் அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி கடலூர் மாவட்ட காவல்துறையிடம் புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித் தேவன் நேற்று மனு அளித்தார்.
ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அவரது போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து புவனகிரி சட்டமன்ற அலுவலகத்தில் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன்.
என்.எல்.சி நிர்வாகத்தின் அராஜகப் போக்கைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. அவருடன் ஏராளமான அதிமுகவினர் மற்றும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் என்எல்சி நிர்வாகம், சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கால்வாய் தோண்டும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடலூர் மாவட்டம் முழுக்க பதற்றம் நிலவி வருவதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது?












Click it and Unblock the Notifications