கமல் கூட்டணி வச்சுக்கலாம்னு சொன்னாரு… நாங்க மறுந்துட்டோம்.. உண்மையை சொன்ன காம்ரேடுகள்
சிதம்பரம்:லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு அழைப்பு விடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனின் கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துள்ளதாக அதன் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறது. தனித்து போட்டி என்று அறிவித்த கமல்.. கூட்டணி தொடர்பாகவும் பல்வேறு கருத்துகளையும் கூறி வருகிறார்.
இந்நிலையில் கமலஹாசன் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பிரோ உறுப்பினர் பிரகாஷ் கரத்தை சந்தித்து பேசினார்.அந்த சந்திப்பில் நடந்தது என்ன என்பது குறித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

கூட்டணிக்காக அழைப்பு
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியிருப்பதாவது:டெல்லியில் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் சந்தித்து கூட்டணிக்காக அழைப்பு விடுத்ததார். ஆனால் கமலின் அழைப்பை பிரகாஷ் கரத் நிராகரித்துவிட்டார்.

வலுவான அணி அமைப்பு
கமலிடம் இது பற்றி பேசிய பிரகாஷ் கரத், இந்தியாவில் பாஜகவை வீழ்த்த ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான அணியை அமைத்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அதிமுக, பாஜக கூட்டணியை வீழ்த்த திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்வது என்று ஏற்கெனவே முடிவெடுத்து விட்டோம்.

தொகுதி பேச்சுவார்த்தை
அதற்கான ஒப்புதலை டிசம்பர் மாதமே தமிழகத்திற்கு கொடுத்துவிட்டோம். இப்போது தொகுதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

வாய்ப்பு இல்லை
எனவே தேர்தல் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பில்லை. எதிர்காலத்திலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்று பிரகாஷ் கரத், கமலிடம் கூறி இருக்கிறார். ஆகையால்.. கூட்டணி பற்றிய அழைப்பை நிராகரித்து விட்டோம் என்று பாலகிருஷ்ணன் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications