Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 வயசில் தமிழரசி விபச்சாரம்.. கடலூரில் விழுந்தடித்து ஓடிவந்த சிறுமிகள்! இப்ப ஜெமீனாவுக்கு 20 வருஷம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடந்த 2014ல் ஒரு தம்பதி, ஆண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி இருவரும், இப்போது சிக்கியிருக்கிறார்கள்.. இந்த வழக்கில் தொடர்புடைய ஏற்கனவே 16 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது முக்கிய குற்றவாளிகளான தம்பதி இருவருமே ஒரே நேரத்தில் சிக்கியிருப்பது பரபரப்பை தந்து வருகிறது. என்ன நடந்தது கடலூரில்?
கடந்த 2014ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் இது. திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயது பள்ளி மாணவிகள் 2 பேரும் திடீர்னு காணாமல் போய்விட்டனர். எனவே, மாயமான மாணவிகளின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், காவல்துறையில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, திட்டக்குடி போலீசார், உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 1 வாரம் கழித்து, 2 மாணவிகளும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.. ஆனால், 2 மாணவிகளுமே உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர்.. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், என்ன நடந்தது என்று தங்கள் மகள்களிடம் விசாரித்தனர்.

Cuddalore Prostitution Tiruvannamalai

புரோக்கர்கள்

பிறகுதான், சதீஷ்குமார்(39), அவரது மனைவி தமிழரசி(39) என்ற தம்பதியினர் பற்றிய விவரம் தெரியவந்தது. அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார், தமிழரசி.. இவர்கள் 2 பேரும்தான் மாணவிகளை கடத்திச்சென்று, பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினார்களாம்.

திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், கோலியனூர், நெய்வேலி, சேலம் போன்ற பகுதிகளிலுள்ள புரோக்கர்கள் மூலம், பாலியல் தொழிலில் மாணவிகளை மிரட்டி ஈடுபடுத்தி சித்ரவதை செய்தார்களாம். இதையெல்லாம் 2 மாணவிகளும் அழுது கொண்டே பெற்றோரிடம் முறையிட்டார்கள்.. இதன்பிறகு, சதீஷ்குமார், தமிழரசி உள்பட 22 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தலைமறைவு

இந்த வழக்கானது, கடந்த 2016ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.. பிறகு சிபிசிஐடி போலீசார் கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், கடந்த 2018ல், சதீஷ்குமார், தமிழரசி இருவருமே தலைமறைவாகிவிட்டார்கள்.. இதன்காரணமாக, தலைமறைவான ஜோடியை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதற்குநடுவில், இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 4.1.2019ம் ஆண்டு, 16 பேருக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட ஜோடி, தலைமறைவாக இருந்தபோதிலும், இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே வழக்கில் தொடர்புடைய நம்மாழ்வார், செந்தில்குமார் ஆகியோர் உடல்நலம் குன்றி மரணமடைந்துவிட்டனர்..

சிபிசிஐடி போலீசார்

ஒருவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதனால், தொடர்புடைய மற்ற 3 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜெபினா(40) என்பவரை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர்.

கிட்டத்தட்ட இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருமே கைதான நிலையில், சதீஷ்குமார், தமிழரசி ஜோடி மட்டும் கிடைக்கவில்லை.. அதேசமயம், 7 வருடங்களாக அந்த ஜோடியை தேடும் பணியிலிருந்தும் போலீசார் சோர்ந்து போகவில்லை..

திருவண்ணாமலை

இப்படிப்பட்ட சூழலில்தான், சதீஷ்குமார் கோவையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக கருமத்தம்பட்டிக்கு சென்ற சிபிசிஐடி போலீசார், அங்கு சதீஷ்குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர.

சதீஷ்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருவண்ணாமலையில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. இதனால் திருவண்ணாமலைக்கு சென்ற போலீசார், வீட்டு வேலை செய்து கொண்டிருந்த தமிழரசியையும் கைது செய்தனர். தற்போது இந்த ஜோடி கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

20 ஆண்டுகள்

இந்நிலையில், ஜெபினா மீதான விசாரணை கடலூர் போக்சோ கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி லட்சுமி ரமேஷ், ஜெபினாவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பு கூறினார். ஜெபினா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..

இப்போது சதீஷ்குமார், தமிழரசி இவர்கள் இருவர் மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்த ஜோடிதான் முக்கிய குற்றவாளிகள் என்பதால், இவர்களுக்கான தண்டனை எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை. 13, 14 வயது சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய ஒவ்வொருவரும் கைதாகி வருவதும், அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை அளித்து வருவதும் கடலூர் மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+