கடலூர் பட்டாசு ஆலையில் நடந்த கோர வெடி விபத்து.. பலியான பெண்.. 2 பேரை கைது செய்த போலீசார்!
கடலூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தைத் தொடர்ந்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் : கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலியான நிலையில், அந்த பட்டாசு ஆலையின் உரிமையாளரான கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிவனார்புரம் கிராமத்தில் இயங்கிவந்த தனியார் வெடிபொருள் தயாரிக்கும் பட்டாசு ஆலையில் நேற்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

பட்டாசு ஆலை விபத்து
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள சிவனார்புரம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில், தனியார் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்று மாலை அரியாங்குப்பம் ஓடைவெளி பகுதியை சேர்ந்த 10 பேர் பணியாற்றினர். அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இதில் மணவெளி பகுதியை சேர்ந்த மல்லிகா (60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயம்
தகவலறிந்து கடலூர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து 9 பேரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 5 பேர் 80 சதவீத தீக்காயங்களுடன் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். ரெட்டிசாவடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

நிவாரணம்
இதனிடையே கடலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும் காயமடைந்தோர் குடும்பத்திற்கு ரூ. 50,000 வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், இவ்விபத்தில் தீக்காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுமதி (45), பிருந்தாதேவி (35), லட்சுமி (24), செவ்வந்தி (19) மற்றும் அம்பிகா (18) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

கைது
இந்நிலையில் கோர விபத்து நிகழ்ந்த பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களான சேகர் (55), கோசலா (50) ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications