ரயில்வே கேட்டை திறக்க சொன்ன பள்ளி வேன் ஓட்டுநர்.. விபத்துக்கு காரணம் என்ன? ரயில்வே விளக்கம்!
கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில் கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது கேட்டை திறக்க பள்ளியின் வேன் ஓட்டுநர் கூறியதாகவும், தான் கடந்து செல்லும் வகையில் கேட்டை மூட வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ஆச்சாரியா என்ற தனியார் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் ரயில்வே கேட் ஒன்று இருந்திருக்கிறது. அதனை கடக்க பள்ளி வேன் முயற்சித்த போது, அந்த வழியில் சிதம்பரம் நோக்கி ரயில் சென்றுள்ளது. அந்த ரயில், பள்ளி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தனியார் பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு, சுக்குநூறாக உடைந்தது. இந்த விபத்தில் பள்ளி வேனில் இருந்த 2 மாணவர்கள் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. விபத்து நடந்த சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு வந்த மக்கள், மாணவர் மற்றும் மாணவி ஆகியோரின் உடல்கள் சிதறி தண்டவாளத்தில் கிடந்ததை பார்த்து பதைபதைத்துள்ளனர்.
இதில் காயம் அடைந்த வேன் ஓட்டுநர் உட்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியமே காரணமாக அப்பகுதி மக்கள் கூறி இருக்கின்றனர். ரயில்வே கேட்டை வழக்கமாக 30 நிமிடங்களுக்கு முன்பாகவே மூடிவிடுவார்கள். ஆனால் இன்று ரயில்வே கேட்டை மூடாமல், கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் ரயில்வே கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல் விபத்து குறித்து ரயில்வே தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என்று பள்ளி வேன் ஓட்டுநர் கேட் கீப்பரிடம் வலியுறுத்தியுள்ளார். கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது, கேட்டை திறக்க வேன் ஓட்டுநர் கூறியுள்ளார்.
தாம் கடந்து செல்லும் வரை மூட வேண்டாம் என்று ரயில்வே கேட் கீப்பரிடம் பள்ளி வேன் ஓட்டுநர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வேன் ஓட்டுநர் அப்படி கூறி இருந்தாலும், ரயில் எங்கு வருகிறது என்ற தகவல் கேட் கீப்பருக்கு நன்றாக தெரிந்திருக்கும். அதேபோல் பள்ளி வேன் ஓட்டுநரின் பேச்சை கேட்டு கேட் கீப்பர் ஏன் திறந்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications