கடலூரில் பள்ளிக்கு வராத மாணவருக்கு அடி, உதை.. பகீர் கிளப்பிய வீடியோ.. ஆசிரியரை கைது செய்த போலீசார்
கடலூர்: சிதம்பரம் நந்தனார் பள்ளியில் மாணவரை ஆசிரியர் சுப்பிரமணியம் என்பவர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ வைரலானது. ஆசிரியர் சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாகத் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இடையில் சில காலம் கொரோனா குறைந்திருந்த போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும், 2ஆம் அலை ஏற்படவே வைரஸ் பாதிப்பு மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

பள்ளிகள் திறப்பு
இந்தச் சூழலில் 2ஆம் அலை முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகளும் முடிவெடுத்து வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் முதற்கட்டமாக தற்போது 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதர வகுப்புகளுக்கு வரும் நவம்பரில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட காலம் கழித்து பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வருகின்றனர்.

கட்டாயப்படுத்தக் கூடாது
அதேநேரம் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு வேக்சின் பணிகள் இன்னும் தொடங்கப்படாததால், சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், பள்ளி நிர்வாகங்களும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று கூறி கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில், கடலூரில் தனது வகுப்பிற்கு வராத மாணவர்களை ஆசிரியர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதைபதைக்க வைக்கும் வீடியோ
கடலூரில் உள்ள ஆண்கள் மேல் நிலைப் பள்ளி ஒன்றில் +2 வகுப்பு படிக்கும் மாணவர்களை ஆசிரியர் ஒருவர், தனது வகுப்புக்கு ஏன் வரவில்லை எனக்கேட்டு தடியால் கொடூரமாக அடித்து, காலால் உதைக்கும் பகீர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கலால் உதைக்கும் ஆசிரியர்
இந்நிலையில் நேற்று மதியம் +2 வகுப்பு இயற்பியல் படிக்கும் மாணவர்கள் சிலரை அந்தப் பள்ளியின் ஆசிரியர் சுப்பிரமணியன் தனது வகுப்புக்கு ஏன் வரவில்லை எனக் கேட்டு கோபத்தில் கையில் வைத்திருந்த தடியால் அடித்துள்ளார். மேலும், ஆத்திரம் தாங்காமல் கால்களாலும் எட்டி உதைத்துள்ளார். இதனை சக மாணவர்கள் தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூக வலைத்தளங்களில் பகரிந்துள்ளனர். பள்ளி மாணவர்களை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கும் இந்த பகீர் வீடியோ வைரலானது. ஆசிரியர் அடித்ததில் காயமடைந்த மாணவர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆசிரியர் கைது
அரசுப் பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் தடியால் அடித்து, காலால் உதைக்கும் இந்த நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் பெற்றோர் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து மாணவர்களைக் கடுமையாகத் தாக்கிய ஆசிரியர் சுப்ரமணியத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications