சோதனை மேல் சோதனை! சொத்துக்களை ஜப்தி செய்த வங்கி! கடனில் சிக்கி தத்தளிக்கும் திமுக எம்.பி.!
கடலூர்: தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்; தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்ற பழமொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ கடலூர் திமுக எம்.பி.ரமேஷுக்கு பொருந்தியுள்ளது.
முந்திரி பருப்பு ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறந்து தொழிலதிபர் என்ற அடைமொழியுடன் உலா வந்த ரமேஷ், அரசியல்வாதி அவதாரம் எடுத்து இன்று கோடிக்கணக்கான ரூபாய் கடனில் சிக்கி தத்தளித்து வருகிறார்.
இவருக்கு கடன் கொடுத்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இவரது சொத்துக்களை ஜப்தி செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுத்திருப்பது தான் தற்போதைய தகவல்.

கடலூர் தொகுதி
கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை தான் உண்டு தன் தொழில் உண்டு என்றிருந்தார். முந்திரி பருப்பு ஏற்றுமதி தொழிலில் கொடிகட்டி பறந்து வந்த ரமேஷ் தமிழகத்திலும் பல்வேறு ஊர்களில் டிரை ஃபுரூட்ஸ் கடைகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்குள் ஒளிந்திருந்த அரசியல் ஆசை துளிர்விட்டதன் விளைவாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவில் சீட் வாங்கி பல கோடிகளை வாரி இறைத்து வெற்றி பெற்றார்.

சொத்துக்கள் ஜப்தி
இச்சூழலில் இவரது முந்திரி ஆலையில் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் அந்த வழக்கில் சிக்கி ரமேஷ் தத்தளித்து வருகிறார். வழக்கு விசாரணை என அதை ஒரு வழியாக முடிப்பதற்கு முன்னரே வங்கி வடிவில் அவரை புது சோதனை ஒன்று துரத்தி வருகிறது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரமேஷ் வாங்கிய கடனுக்கு தவணைத் தொகையை முறையாக திருப்பிச் செலுத்தாததால் சொத்துக்களை ஜப்தி செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

ரூ.50 கோடி
தற்போதைய நிலவரப்படி கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்கு ரூ.50 கோடிக்கும் மேல் கடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஜப்தி நடவடிக்கைக்கு சென்ற வங்கி ஊழியர்களை எம்.பி.யின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினர் அங்கு வரவழைக்கப் பட்டிருக்கின்றனர். இதனால் நொந்து போன திமுக எம்.பி. ரமேஷ், இந்த விவகாரம் தொடர்பாக தனது வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

பழமொழி பொருந்தும்
தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்; தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்ற பழமொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ கடலூர் திமுக எம்.பி.ரமேஷுக்கு பொருந்தியுள்ளது. அரசியலை தவிர்த்து எப்போதும் போல் தனது தொழிலில் மட்டும் அவர் கவனம் செலுத்தியிருந்தால் இந்தளவுக்கு நிலைமை சென்றிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அவரை பற்றி அறிந்தவர்கள்.
-
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ் -
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி..வைத்தியலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?குறுக்கே வந்த இளைஞர்.. போச்சே -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
கண்ணைக் காட்டிய உதயநிதி..அறிவாலயத்தில் குவிந்த வாரிசுகள்! 2026 தேர்தல் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்!












Click it and Unblock the Notifications