கடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர்
கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மீட்பு பணிக்காக முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு வள்ளி விளாஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்து விருந்து உபசரித்தார்
கடலூர்: நிவர் புயல் பாதிப்பினால்அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம்தான். உயிரை பணயம் வைத்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், அரசுத்துறை அதிகாரிகளும் புயல் மீட்புபணியில் ஈடுபட்டனர். திருமண மண்டபத்தில் தங்கியுள்ள பேரிடர் மீட்புக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்தார் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சகாமுரி
கரையை கடந்த நிவர் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர்தான். தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டதால் உயிர்சேதம் ஏற்படாமல் தப்பினர். பயிர்களும், வாழை, கரும்புகளும் சேதமடைந்தன. புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் பழனிச்சாமி நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி உத்தரவிட்டுள்ளார். இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வெள்ளம் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வடியவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வெள்ள சேத பகுதிகளை துரிதமாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. வேஷ்டி, சேலை வழங்கவும், அரிசி பருப்பு வழங்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மீட்பு பணிக்காக முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு வள்ளி விளாஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்து விருந்து கொடுத்து உபசரித்தார்.
கடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர் #NivarCyclone #Cuddalore pic.twitter.com/iqKTzSy7mI
— Oneindia Tamil (@thatsTamil) November 27, 2020
மாவட்ட ஆட்சியர் தனது கையில் குருமா வாளியை எடுத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நேரில் சென்று பரிமாறியதோடு எல்லோரும் நன்றாக கேட்டு வாங்கி சாப்பிடுங்கள் என்று பாசத்தோடு தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் கவனிப்பில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அதிகாரிகளும் நெகிழ்ந்து போயினர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications