கடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர்
கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மீட்பு பணிக்காக முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு வள்ளி விளாஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்து விருந்து உபசரித்தார்
கடலூர்: நிவர் புயல் பாதிப்பினால்அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம்தான். உயிரை பணயம் வைத்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், அரசுத்துறை அதிகாரிகளும் புயல் மீட்புபணியில் ஈடுபட்டனர். திருமண மண்டபத்தில் தங்கியுள்ள பேரிடர் மீட்புக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்தார் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சகாமுரி
கரையை கடந்த நிவர் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர்தான். தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டதால் உயிர்சேதம் ஏற்படாமல் தப்பினர். பயிர்களும், வாழை, கரும்புகளும் சேதமடைந்தன. புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் பழனிச்சாமி நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி உத்தரவிட்டுள்ளார். இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வெள்ளம் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வடியவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வெள்ள சேத பகுதிகளை துரிதமாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. வேஷ்டி, சேலை வழங்கவும், அரிசி பருப்பு வழங்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மீட்பு பணிக்காக முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு வள்ளி விளாஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்து விருந்து கொடுத்து உபசரித்தார்.
கடலூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர்... விருந்து கொடுத்து உபசரித்த கலெக்டர் #NivarCyclone #Cuddalore pic.twitter.com/iqKTzSy7mI
— Oneindia Tamil (@thatsTamil) November 27, 2020
மாவட்ட ஆட்சியர் தனது கையில் குருமா வாளியை எடுத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நேரில் சென்று பரிமாறியதோடு எல்லோரும் நன்றாக கேட்டு வாங்கி சாப்பிடுங்கள் என்று பாசத்தோடு தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் கவனிப்பில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அதிகாரிகளும் நெகிழ்ந்து போயினர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications