முற்றும் உட்கட்சி மோதல்! கடலூரில் திமுக அமைச்சர் & எம்எல்ஏ ஆதரவாளர்கள் அடிதடி! மாறி மாறி சாலை மறியல்
கடலூர்: கடலூரில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலேயே திமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. கடலூர் மோயராக உள்ள மேயர் சுந்தரி தலைமையில் இந்த மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினர். மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் சுந்தரி பதில் அளித்தார்.

கடலூர்
அப்போது 8ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சுமதி என்பவர் தங்கள் வார்டு குறித்து சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு மேயர் சந்தரி பதில் அளிக்க முனைந்தார். இருப்பினும், அதற்குள்ள மற்ற வார்டு உறுப்பினர்கள் அதற்குப் பதில் அளித்தனர். அப்போது பல உறுப்பினர்கள் மாறி மாறி பேசியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

தாக்குதல்
இந்த கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒரு தரப்பாகவும் கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் ஆதரவாளர்கள் ஒரு தரப்பாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தீவிரமடைந்த நிலையில், எம்.எல்.ஏ ஆதரவாளராக கூறப்படும் 11 மாவட்ட உறுப்பினர்கள் சேர்ந்து 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஃபாருகலி, 42 வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமியின் கணவர் செந்தில்குமார் ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

வலியுறுத்தல்
அதுவும் மாநகராட்சி அலுவலகத்திலேயே வைத்துத் தாக்கி உள்ளனர். இதனால் ஆவேசமடைந்த மற்றொரு தரப்பினர் மாமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி மாமன்ற கூட்டத்திலேயே மேயர் சுந்தரி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மேயர் சமாதானம் செய்தார். இருப்பினும், தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டம்
இதையடுத்து மாமன்ற கூட்டம் முழுமையாக நிறைவு பெறாமலேயே கூட்டத்திலிருந்து மாநகராட்சி மேயர் வெளியேறினார். அதன் பின்னரும் பிரச்சினை ஓயவில்லை. இரு தரப்பினரும் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு தனித்தனியாகச் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.. வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திமுக கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

போலீஸ்
அதேபோல எம்எல்ஏ ஐயப்பன் ஆதரவாளர்கள் மேயருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆளும் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே இரு வேறு பிரிவுகளா பிரிந்து சாலை மறியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி, போக்குவரத்தைச் சீர் செய்ய முயன்றனர்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications